சேலம், பிப்.25- உலக தமிழ் மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு முற்போக்கு எழுத் தாளர்கள் மற்றும் கலைஞர் கள் சங்கம் சார்பில் செவ்வா யன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது. தமிழகத்தில் அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழ் மொழியைக் கட்டா யமாக்கவேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் மொழி மட்டுமே அரியணை ஏற்றப் பட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். ஆலயங் கள் அனைத்திலும் தமிழ் மொழியில் வழி பாடு நடத்த வேண்டும் எனவும் அன்னிய மொழித் திணிப்பை ஏற்க மாட்டோம். மேலும் குழந்தைகளை தமிழை கற்கவும், தமிழ் வழியில் படிக்க செய்ய வேண்டும் என பிரச்சார இயக்கத்தில் வலியுறுத்தப் பட்டது. இந்த பிரச்சார இயக்கம் சேலம் மாநகரம், சூரமங்கலம் உழவர் சந்தை, அஸ்தம்பட்டி உழவர் சந்தை, கோட்டை மைதானம், அம்மாபேட்டை காந்தி மைதானம், பள்ளப்பட்டி பெரம்பலூர் மிதிலா கோரிமேடு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நிறைமதி, தலைவர் மதுரபாரதி, கௌரவத் தலைவர் இலா.வின்சென்ட், மாநிலக்குழு உறுப்பினர் மேட்டூர் வசந்தி, ஜீ.கண்ணன், ஷோபனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.