tamilnadu

img

உழைக்கும் பெண்கள் மறியல்-கைது

சம வேலைக்கு, சம ஊதியம் வழங்குக

சேலம், மார்ச் 6- சம வேலைக்கு சம ஊதியம் வழங்குமாறு வெள்ளியன்று உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்பு குழுவினர் சேலம் மற்றும்  தருமபுரியில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டு கைதாகினர். உழைக்கும் பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் என்ற அடிப்படையில் ஆண்களுக்கு இணையாக, பெண்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதி ரான குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து அமைப்புகளிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தனி யார் நிறுவனங்களிலும் மகப்பேறு விடுப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு உழைக்கும் பெண்கள்  ஒருங்கிணைப்பு குழு சார்பில் சேலம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடை பெற்றது.  இப்பேராட்டத்திற்கு மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் வைரமணி தலைமை தாங்கினார். சிஐடியு  மாவட்ட செயலாளர் டி.உதய குமார், மாவட்டத் தலைவர் பன்னீர்  செல்வம், மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ, மாநில குழு உறுப் பினர் எ.கோவிந்தன், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந்தரி, மாவட்டத் தலைவர் டி.பரமேஸ்வரி,  எஸ்.எம். தேவி  ஆகியோர் கோரிக்கைகளை  விளக்கிப் பேசினர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடு பட்ட நூற்றுக்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

தருமபுரி

இதேபோல், தருமபுரியில் நடை பெற்ற மறியலுக்கு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின்  மாவட்ட அமைப்பாளர் சி.கலாவதி தலைமை வகித்தார். சிஐடியு மாநில செயலாளர் சி.நாகராசன் துவக்கி வைத்தார்.  மாவட்டத் தலைவர் பி. ஜீவா, மாவட்டப் பொருளாளர் ஏ. தெய்வானை,  மாநிலக்குழு உறுப் பினர் சி.அங்கம்மாள், மாவட்ட இணை செயலாளர்கள் எம்.லில்லி புஷ்பம், எம்.ஈஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தருமபுரி தொலை பேசி நிலையத்தில் இருந்து ஊர்வல மாகச் சென்ற நிலையில், ராஜ கோபால் பூங்கா அருகில் போலீசார்  தடுத்து நிறுத்தி 500க்கும் மேற்பட் டவர்களை கைதுசெய்தனர்.