tamilnadu

கார் மோதி பனியன் தொழிலாளி பலி

பல்லடம், ஜூலை 9-  பல்லடம் அருகே கார் மோதி பனியன் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.  பல்லடம் கள்ளகிணறு பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (23). பனியன் தொழி லாளி. திங்களன்று  கம்பெனியில் இருந்து சாப்பிட வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில்  புறப்பட்டார்.ஆலுத்துப்பாளையம் பிரிவு அருகில் சென்றபோது எதிரே ஒரு கார் வந்தது. எதிர்பாராதவிதமாக காரும், இரு சக்கர வாகனத்தில்  நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரசாத் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  விபத்தின்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில்  வந்த கள்ளிபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (60) என்பவர் கார் மீது மோதி காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்து குறித்து  பல்லடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.