ஏற்காடு, பிப். 7- சேலம் மாவட்டம், ஏற்காட்டில், பஞ்சாயத்து சார்பில் ஏற்காடு ஒன்டிக்கடை பகுதியில் காய்கறி மற்றும் உணவு கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் உணவு கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி குறித்து உணவு விடுதியினருடன் பஞ்சாயத்து தலைவர் சிவசக்தி ஆலோசணை நடத்தினார். ஏற்காடு யூனியன் சேர்மேன் சாந்தாவள்ளி அண்ணாதுரை தலை மையில் துவங்கிய கூட்டத்தில் பாபா அனு ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞாணி டேனி யல் செல்லப்பா கலந்து கொண்டு, உணவு கழிவில் இருந்த தயாரிக்கப்படும் வாயுக்கள் வகைகள் குறித்தும் அதன் பயன்பாடு குறித்தும் விளக்கினார். ஏற்காடு டவுன் ஊராட்சி மன்ற தலைவர் சிவ சக்தி “ தேநீர் கடைகள், உணவு விடுதிகள், பழக் கடை ஆகியவற்றில் வீணாகும் கழிவுகளை தனி யாக பிரித்து, குப்பை உள்ளிட்ட கழிவுகள் பெற வருபவர்களிடம் வழங்க வேண்டும். அப்போது மின்சாரம் தயாரிக்கும் பணி சற்று எளிமையாகும். மேலும், தற்போது மின்சாரம் தயாரிக்கும் ஆலை போல, நெகிழி கழிவுகளில் இருந்து நெகிழி மூலப்பொருட்கள் தயாரிக்கும் ஆலை பணிகள் நடை பெற்று வருகிறது. மேலும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் இயந்திரம் வாங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது “ என பேசினார்.