tamilnadu

img

நூறு நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்கிடுக

சேலம், ஏப். 26-நூறு நாள் வேலை திட்டத்தில் அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் முறையாக வேலை வழங்கிடக்கோரி கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் குருவம்பட்டி மற்றும் தங்காயூர் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்ட பணியாளருக்கான அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மனு அளித்தனர். இம்மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் அனைவருக்கும் வேலை வழங்கநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். முன்னதாக, விதொச மாவட்டத் தலைவர் வி.தங்கவேல், மாவட்ட செயலாளர் ஜி.கணபதி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் எ.ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இம்மனுவினை அளிக்க திரண்டு வந்தனர்.

;