tamilnadu

img

காதலிக்க மறுத்த பெண் கத்தியில் குத்தி கொலை - இளைஞர் வெறிச்செயல்

கோவை, ஜூலை 18 - காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறுகையில், கோவை பேரூர் எம்.ஆர் கார்டன் பகுதியைச்  சேர்ந் தவர் சக்திவேல். இவரது மகள் ஐஸ் வர்யா, பேரூர் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு படித்து  வருகிறார். இவரை அதேபகுதியைச்  சேர்ந்த ரதீஸ் என்பவர் காதலித்து வந்துள்ளார். இவ்விவகாரம் பெண் வீட்டாருக்குத் தெரியவர அவரை கண்டித்துள்ளனர். இதனால் கடந்த மூன்று மாதங்களாக ஐஸ்வர்யா ரதீஸூடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், வெள்ளியன்று இரவு ஐஸ்வர்யா வீட்டுக்கு சென்ற ரதீஸ், தன்னை காதலிக்குமாறு வற் புறுத்தியுள்ளார். இதற்கு மாணவி மறுக்கவே மறைத்து வைத்திருந்த கத்தி யால் ஐஸ்வர்யாவை குத்தியதாகத் தெரிகிறது. வயிற்றுப்பகுதி, நெஞ்சு உள்ளிட்ட நான்கு இடத்தில் கத்தியால்  ரதீஸ் குத்தியதால் அவர் அலறியுள் ளார். இதையடுத்து மகளின் சத்தத்தை கேட்டுத் தடுக்க வந்த தந்தைக்கும் இரு கைகளில் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலை யில், சிகிச்சைப் பலனின்றி ஐஸ்வர்யா  சனியன்று இறந்தார். தலைமறை வான இளைஞரை கோவை பேரூர் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.