கோவை, பிப். 9- கோவையில் பெண் பொறியாளர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், இருகூர், போஸ் நகர், மகாத்மா காந்தி சாலையை சேர்ந்த வர் சேகர் (29). இவரது மனைவி பெங்களூ ரில் கணினி பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 5 ஆம் தேதியன்று சேகர் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான பழ னிக்குச் சென்றார். சனியன்று இரவு வீடு திரும்பிய சேகர் வீட்டின் கதவு உடைந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள் ளார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து சேகர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகா ரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.