tamilnadu

உடற்கூறு ஆய்வுக்காக 10 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்ணின் பிரேதம் தோண்டி எடுப்பு

அவிநாசி, செப்.26- பெருமாநல்லூர் அருகே  உயிரிழந்த பெண்ணின் சடலம் உடற்கூறு ஆய்விற்காக 10 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருமாநல்லூர் அருகே அப்பியாபாளையம் பகுதி யைச் சேர்ந்த பாப்பாத்தி (எ) ராமாத்தாள் மற்றும்   ஈட்டிவீரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னப்பன்(எ) தேவனன் ஆகியோருக்கு 1976ஆம் ஆண்டு திருமணம்  நடைபெற்றுள்ளது. அதன்பிறகு சில தினங்களிலேயே ராமாத்தாள் கணவரை விட்டுப் பிரிந்து, அப்பியாபாளை யத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிலேயே தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போது ராமாத்தாள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துமனையில் சிகிச்சை பெற்று  வந்ததாக கூறப்படுகிறது.  இதற்கிடையில் அவரது தந்தையின் சொத்தான 2  ஏக்கர் நிலத்தை, அப்பியாபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (62) என்பவருக்கு 2009 மார்ச் 16 ஆம் தேதி யன்று விற்பனை செய்துள்ளார். நிலத்தை வாங்கிய ராஜ் குமார் உடனடியாக அவரது மனைவி நந்தினி பெய ருக்கு ஆவணத்தை மாற்றியுள்ளார். அதன் பிறகு 10  நாள்களிலேயே (2009 மார்ச் 26) பாப்பாத்தி(எ)ராமத்தாள் உயிரிழந்தார். இவரது உடல் பெருமாநல்லூர் அருகே அப்பி யாபாளையம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.  இச்சூழலில் ராமாத்தாளின் அண்ணன் நாராயண சாமியின் மகள் பரமேஸ்வரி,  தனது அத்தை ராமாத்தாள் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கொடுத்த புகாரின் பேரில், பெருமாநல்லூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, காவல்துறை யினர் விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து,  புதன்கிழமை ராமாத்தாளின் உடல், மறு உடற்கூறு பரிசோ தனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது. சட்டம் சார்ந்த  மருத்துவப் பேராசிரியர் ஜெய்சிங் தலைமையிலான மருத்து வக் குழுவினர் மற்றும் வட்டாட்சியர் சாந்தி, அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் பரமசாமி ஆகியோர் முன்னிலையில், ராமாத்தாள் உடல் பொக்லைன் இயந்தி ரம் மூலம் பாதுகாப்பாக தோண்டி எடுக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவக் குழுவினர், ராமாத்தாளின் முக்கிய உடல் பாகங்களை உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு, மீதமுள்ள உடல் பாகங்களை மீண்டும் அதே பகுதி யில் புதைத்தனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்ணின்  உடல் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் பெருமாநல்லூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.