tamilnadu

img

தனியார் மருத்துவமனை உரிமையாளர்களுடன் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்

கோவை, மார்ச் 24- கோவையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து தனியார் மருத்துவமனை உரிமையாளர்களு டனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திங்க ளன்று நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து  தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் மற்றும் மருத்துவர்களுடனான ஆலோ சனை கூட்டம் திங்களன்று மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ள தாவது, கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக் கைகள் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கோவை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள வர்களை சோதிக்கவும், சிகிச்சை அளிக்கவும் வசதிகள் ஏற்படுத்தப் பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதற்கென மருத்துவ மனையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட தனி வார்டு ஏற்படுத்தப்பட் டுள்ளது.  இந்நிலையில் கோவை மாவட்டத் தில் உள்ள தனியார் மருத்துவமனைக ளிலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளும் முழு வீச்சில் செய் திட ஏதுவாக அந்தந்த மருத்துவம னையில் ஏற்கனவே உள்ள வசதிக ளின் அடிப்படையில் 25 விழுக்காடு தனியாக ஒதுக்கிட வேண்டும். தேவை யின் அடிப்படையில் இவ்வசதிக ளைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப் பாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. இதற்கு தனியார் மருத்துவம னைகள் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கவும், தயார் நிலை விபரத்தினை மாவட்ட நிர்வாகத்திற்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குநர் அவர்களுக்கும் தெரிவித்திட வேண் டும் என கேட்டுக்கொண்டார்.  இவ்வாலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இராம துரைமுருகன், அரசு மருத்துவ கல் லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன், இணை இயக்குநர் (சுகாதா ரப்பணிகள்) கிருஷ்ணா உட்பட தனி யார் மருத்துவமனை உரிமையா ளர்கள் மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.