பொள்ளாச்சி, நவ. 11- வன விலங்கு, மனித மோதலை தடுக்க தமிழக அரசு வனத்துறைக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியினை நீலகிரி,கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் நெல்லை என ஐந்து மாவட்டங்க ளுக்கு பகிர்ந்தளித்துள்ளது. இந்த நிதி யினை கொண்டு முறையான திட்டத்தினை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது. இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலை வர் வி.எஸ்.பரமசிவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டிலேயே வனவிலங்கு, மனித மோதல்கள் கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் நடைபெறு கிறது. குறிப்பாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளை ஒட்டி யுள்ள கிராமங்களில் இருக்கிற மக்களுக்கு மிகப் பெரும் இடையூறாக இருக்கிற வன விலங்குகளின் நடமாட்டம் நிச்சயம் தவிர்க் கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி வனவி லங்குகளின் நடமாட்ட பாதைகளை ஆக்கிர மிப்பு செய்து, மதில் சுவர்கள் மற்றும் அகழிக ளாக, ஆக்கிரமிப்பு செய்து உல்லாச விடுதி கள் என்கிற பெயரால் வருமானம் ஈட்டுகிற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், ஆன்மீக தலங்கள் என்கிற பெயரால் வன நிலங்களையும், வனவிலங்கு நடமாட்டத்தை தடுக்கிறவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதை விடுத்து, மனித, வனவிலங்கு மோதல் என்கிற பெயரால் வனத்துறைக்கு சாதக மான உபகரணங்களையும், வாகன வசதி களையும் ஏற்படுத்துவதை தவிர்த்துவிட்டு உபயோகமான பணிகளில் வனத்துறை ஈடுபட தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும். பல்லாண்டு காலமாக வனத்திற் குள், வனவிலங்குகளுக்கு மத்தியில் வனங்க ளைப் பாதுகாத்து வாழுகிற பூர்வகுடிகளான மலைவாழ் மக்களை பாதுகாக்கிற, அரசி யலமைப்பின் சட்டத்திற்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் மதிப்ப ளிக்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்பட்ட பழங்குடி மக்களுக் கான உரிமைகள் வழங்கப்படுவதோடு, அவர்களின் பண்பாடு, கலாச்சாரம், நாகரீ கம் குறித்த விசாலமான பார்வையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். பழங்குடி மக்களைத் தவிர்த்து, வனங்களை, வனவி லங்குகளை, ஒருவரும் பாதுகாக்கப் போவ தில்லை என்கிற உண்மையை தமிழக அரசு உணர வேண்டும்.
மனித, வனவிலங்குகள் மோதலை தவிர்த்திட வனச்சூழல் மற்றும் வனவிலங்கு நடமாட்ட காலச்சூழல் அறிந்தி ருக்கிற, பூர்வகுடி பழங்குடி இளைஞர்களை இப்பணியில் ஈடுபடுத்த தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். வனவிலங்கு நடமாட்டத்தினை கண்காணிக்க தற்காலிக வன பாதுகாப்பு காவலர்களின் எண்ணிக் கையினை அதிகப்படுத்த வேண்டும். இதனை தமிழக வனத்துறை அமைச்சர் மற்றும் வனத்துறை உயர்மட்ட அலுவ லர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் ஆகி யோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு மேற்கண்ட பணிகள் செய்யப்பட வேண் டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.