tamilnadu

காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறு பரப்புவதா?

திருப்பூர், ஆக. 17 – தாராபுரம் புத்தகத் திருவிழாவில் நடத்தப்பட்ட கட்டைக்கால் கலை நிகழ்ச்சி பற்றி காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறு பரப்பிய காலைக்கதிர் நாளிதழுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தாராபுரம் புத்தகக்  கண்காட்சி குழு சார்பிலும் தமுஎகச அமைப்பினர் சனியன்று வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கம் ஆறு ஆண்டுகளாக தாராபுரத்தில் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.  

இவ்வாண்டும் ஆகஸ்ட் 16 ஆம்  தேதியன்று புத்தக வாசிப்பு விழிப்பு ணர்வுப் பேரணி தாராபுரம் நகரத்தின் மையப்பகுதியில் நடைபெற்றது. இப்பேரணியின் முன் தமிழ்ப் பாரம் பரியக் கலைகளுடன் எங்கள் கலை ஞர்களும் அணிவகுத்து வந்தனர். இவ் வாண்டு குறிப்பாக கட்டைக்கால் ஆட்டத்தினை எங்கள் கலைஞர்கள் ஆடிவந்தார்கள். அதில் இளம் கலை ஞர்களும் பங்கேற்றனர். இவர்கள் மூத்த கலைஞர்களுக்கு இணையாக  தங்கள் திறன்களைக்காட்டி மகிழ்ச்சி யாக அணிவகுத்தனர். மாலை விழா  மேடையில் ஒயிலாட்டம், கோலாட் டம், கட்டைக்கால் ஆட்டம் என பல விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களின் பாராட்டைப் பெற்றனர். இப்படிப்பட்ட சிறந்த தமிழ்ப்  பாரம்பரியமிக்க இளம் கலை ஞர்களையும், எங்கள் கலைகளையும் கொச்சைப்படுத்தும் விதமாக காலைக் கதிர் நாளிதழில் சனியன்று “முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஊர்வலத்தில் சிறுமிகள் சித்திரவதை” என்ற தலைப்பில் அவதூறாக செய்தி வெளியிட்டுள்ளது. ஊர்வலத்தில் சிறுமிகள் யாரும் சித்திரவதை செய் யப்படவில்லை என்பதை பார்வை யாளர்கள் நன்கு அறிவர். தமுஎகச மற்றும் புத்தகத் திருவிழா குழு மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, ஏதோ உள்நோக்கத்தோடு அவதூறுச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதை இது காட்டு கிறது. எனவே எங்கள் மீது அவதூறுச் செய்தி வெளியிட்ட காலைக்கதிர் நிர்வாகத்தை வன்மையாகக் கண்டிக் கிறோம். இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.