கோவை, ஆக.30- சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் அளித்த வாக்குறுதி என்னானது, எங்களின் பணம் எங்கே? என கேட்டு கோவை யில் வெள்ளியன்று அரசு போக்கு வரத்து ஓய்வூதியர்கள் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர் களுக்கு வழங்க வேண்டிய பிஎப் மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட பணப்பயன்கள் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்ப டாமல் உள்ளது. ஓய்வுபெற்ற பின் னரும் தங்களுடைய பணத்தை பெற முடியாமல் நீண்டகாலமாக அரசு போக்குவரத்து ஓய்வூதி யர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதர வாக அரசு போக்குவரத்து ஊழியர் கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டத்திலும் ஈடு பட்ட நிலையில், நீதிமன்றம் எச்சரிக்கைக்கு பிறகு ஓய்வூதி யர்கள் சிலருக்கு பணப்பயன்கள் வழங்கப்பட்டது. மேலும் பலருக்கு வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற கூட்டத்தொட ரில் இதுதொடர்பான கேள்விக்கு 110 விதியின் கீழ் தமிழக முதல் வர் அளித்த பதிலில், ஓய்வூதியர்க ளின் பணப்பயன்கள் ரூ.1,093 கோடி ஒதுக்கப்படும் எனவும், இத் தொகையை ஒருவார காலத்திற்குள் வழங்கப்படும் எனவும் தெரிவித் திருந்தார்.
2018 ஆம் ஆண்டு ஏப் ரல் முதல் 2019 ஆம் ஆண்டு மார்ச் வரையிலான ஓய்வூதியர்களுக் காக தொகை ஒதுக்கப்பட்டு அர சாணையும் வெளியிட்ட பிறகும் இத்தொகை உரியவர்களுக்கு இது வரை வந்து சேரவில்லை. இதனை யடுத்து தமிழகம் முழுவதும் போக்கு வரத்து கழக தலைமை அலுவல கத்தை முற்றுகையிடுவது என அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு அறிவித் தது. இதன்ஒருபகுதியாக கோவை யில் வெள்ளியன்று மேட்டுப்பாளை யம் சாலையில் உள்ள அரசு போக்கு வரத்து தலைமை பணிமனையை முற்றுகையிட்டு அரசு போக்கு வரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதில் சங்கத்தின் தலை வர் ஜி.பழனிச்சாமி, பொதுச் செயலாளர் பி.செல்வராஜ், நிர் வாகிகள் சேதுராமன், கே.நாகராஜ் உள்ளிட்டோர் தலைமையில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட அரசு போக்கு வரத்து ஓய்வூதியர்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து போக்கு வரத்து கழக அதிகாரிகளிடம் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உயர் அதிகாரிகளின் உத்த ரவை பெற்று விரைவில் நிலுவை தொகை வழங்கப்படும் என கழக அதிகாரிகள் உறுதியளித் ததையடுத்து போராட்டத்தில் ஈடு பட்ட அனைவரும் கலைந்து சென் றனர். இப்போராட்டத்தில் அரசு போக்குவரத்து கழக தலைமை பணிமனை முன்பு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.