tamilnadu

img

தமிழை மொழியாக கருதாமல் நமது அடையாளமாக கருத வேண்டும்

கோவை, ஆக. 12- உலகில் மாறாத மொழியாக தமிழ் மொழி திகழ்ந்து வருகிறது. தமிழை மொழியாக கருதாமல் தமிழர்களின் அடையாளமாக கருத வேண்டும் என கோவையில் நடைபெற்ற தமிழாற்றுப்படை புத்தக அறிமுக விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார்.  கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் கவிப்பேரரசு வைரமுத்து வின் தமிழாற்றுப்படை புத்தக அறிமுக விழா நடைபெற்றது. புத்தக அறிமுக விழாவில் கவிஞர் வைர முத்து பேசியதாவது, கோவை மக்கள் தமிழகத்தில் மிகவும் மாறு பட்டவர்கள். பஞ்சினை நூலாக மாற்றுவது போல புத்தகத்தினை யும் நூலாக மாற்றுபவர்கள்.  கல்வி, மொழி, தொழில், மருத்துவம் என உலகத்தில் பெரிய பெயரினை கோவை எடுத்து வருகிறது.  தமிழில் தினமும் பேசினால் மொழிப் புலமையினை பெற்று மிகச்சிறந்த பேச்சாளராக வரமுடி யும். தமிழர்கள் மாபெரும் அறிவுத் திறன் படைத்தவர்கள். இந்த அறி வுத்திறனை அனைத்து தமிழர்க ளும் வெளிக்கொண்டு வரவேண் டும். நான் அதிகமாக நேரத்தினை செலவழித்து கடுமையாக உழைத்து நான்கு வருடம் எழுதிய புத்தகம் தமிழாற்றுப்படை. தமி ழர்கள்தான் அதிக வீரம், மரியாதை,  மானம் உள்ளவர்கள். ஒவ்வொரு தமிழனும் தமிழுக்கு தொண்டு ஆற்றியவர்களை வணங்க வேண்டும். தமிழை காப்பாற்ற என்ன வழி என்பதை 3 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தொல் காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழை வாசிக்க வாசிக்க அதன்மேல் வசியம் கூடும். இன் னும் உலகில் மாறாத மொழியாக தமிழ் இருந்து வருகிறது. சில பள்ளி கள் தமிழில் பேசினால் அபராதம் விதிப்போம் என மாணவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது. இவ்வாறு தமிழில் பேசினால் தண் டிப்போம் என கூறும் நிறுவனங் களை வன்மையாக கண்டிக்கி றேன். தமிழை மொழியாக கருதா மல் தமிழர்களின் அடையாளமாக கருத வேண்டும். நல்ல விசயங்களை மட்டும் சமூக ஊடகங்களில் பகிருங்கள். சொந்த கருத்துக்கள் நல்ல விஷயங்களை கூறும் பொழுது அதை சமூக ஊட கங்கள் தவறாக பரப்பி வருவது சரியானது அல்ல. வைரமுத்துக்கு ஏற்படும் எதிர்ப்பு தமிழுக்கு ஏற் பட்ட எதிர்ப்பாகும் என்றார். வெற்றி தமிழர் பேரவை சார் பில் ஏற்பாடு செய்யபட்ட இந் நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள் மாரியப்பன், முருகன், எம்.என். சுகுமார், கிருஷ்ணா கல்விக் குழு மங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, மரபின் மைந்தன் முத்தையா, விஜய் பார்க் இன் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.