tamilnadu

img

உப்பு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும்

தூத்துக்குடி, ஜூன் 9- தூத்துக்குடி மாவட்ட உப்பு தொழிலாளர்கள் சங்க 15 வது மாவட்ட மாநாடு ,மாசிலாமணி புரம் பி.சி.வேலாயுதம் நினைவ ரங்கத்தில் நடைபெற்றது.  உப்பு தொழிலாளர் சங்க உதவி தலைவர் எஸ்.லிங்கம்மாள் கொடியேற்றி வைத்தார்.மாநாட் டிற்கு மாவட்ட தலைவர் கே.பொன் ராஜ் தலைமை வகித்தார். உதவி தலைவர் சங்கரன் வரவேற்புரை யாற்றினார்.உதவி தலைவர் ராம சாமி அஞ்சலி தீர்மானம் நிறை வேற்றினார். சிஐடியு மாநில செய லாளர், முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் எஸ்.கே.மகேந்திரன் துவக்க வுரையாற்றினார்.சிஐடியு மாவட்ட தலைவர் இரா.பேச்சிமுத்து வாழ்த்துரை ஆற்றினார். உப்பு தொழிலாளர் சங்க மாவட்ட தலை வர் பொன்ராஜ் நிறைவுரையாற்றி னார். நிர்வாகிகள் தேர்வு  தூத்துக்குடி மாவட்ட உப்பு தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவராக பொன்ராஜ், மாவட்டச் செயலாளராக சங்கரன், மாவட்ட பொருளாளராக மணவாளன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டன. கொளுத்தும் வெயிலின் தாக் கத்தை உள்வாங்கி கொண்டு பணி புரியும் உப்பள தொழிலாளிகளுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.600 வீதம் மாதம் ரூ. 18,000 வழங்க வேண்டும். உப்பள தொழிலாளிகளுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். உப்பளப் பகுதிகளில் பாதுகாக்கப் பட்ட குடிநீர்,கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், உப்பு தொழிலுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும், உற்பத்தி செய்யப்படு கின்ற உப்பை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்வ தற்கான சந்தைகள் உருவாக்கி உப்பு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உப்புத் தொழிலாளர் களுக்கு இலவச வீட்டுமனை, வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.