tamilnadu

ஏழை மாணவியின் படிப்புக்கு உடனடியாக உதவி செய்த வட்டாட்சியர்

உடுமலை, ஜூன் 19- உடுமலை வட்டாட்சியர் அலுவல கத்தில் செவ்வாயன்று குறிச்சிக்கோட்டை பிர்க்கா உள்வட்ட கிராமங்களுக்கு வரு வாய் தீர்வாயம் நடைபெற்றது. ஜல்லிபட்டி கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் நிலா என்ற மாணவி  அரசு பள்ளியில் படித்து  வருகிறார். இந்த மாணவிக்கு அரசு சார்பில்  புத்தகங்கள் இலவசமாக கிடைக்கிறது. ஆனால் நோட் மற்றம் புத்தங்களுக்கு தேவையான வழிகாட்டி (கைடு ) வாங்க  போதிய வசதியின்றி உள்ளார். இதுகுறித்து தனக்கு உதவுமாறு வட்டாட்சியரிடம் மனுவளித்தார்.  உடனடியாக மாணவியின் கோரிக் கையை நிறைவேற்றும் வகையில், அந்த மாணவிக்கு தேவையான அனைத்து நோட்டுகள் மற்றும் வழிகாட்டி (கைடு) உள்ளிட்ட பொருள்களை வருவாய் தீர் வாய அதிகாரியும், சமூக பாதுகாப்பு துணை  ஆட்சியருமான  ராகவேந்திரன் வழங்கி னார்.  வட்டாட்சியர் தங்கவேல் உள்ளிட்ட  அதிகாரிகள்  உடனிருந்தனர்.