பயனாளிகளை ஏமாற்றும் ஒப்பந்தக்காரர்
பொள்ளாச்சி, டிச.15- பொள்ளாச்சி அடுத்த நாட்டுக்கல்பாளையம் கிராமத்தில் சுவச் கழிப்பிடத் திட்டத்தின் கீழ் கட்டப்பட கழிப்பறைகளுக்கு செப்டிக் குளிகள் கட்டப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் திறந்தவெளி கழிப்பிடங்களையே பயன்படுத்தி வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது நாட்டுக்கல்பாளை யம் மதுரைவீரன் கோவில் வீதி. இப்பகுதியில் 200த்திற்கும் மேற்பட்ட தலித் அருந்ததியர் குடும்பங் கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசின் ‘சுவச் பாரத் ‘ எனும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒப்பந்த தாரர்கள் மூலமாக தனிக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கட்டப்பட்ட 50 க்கும் மேற்பட்ட கழிப்பறைகளுக்கு (செப்டிக்) சாக்கடை கழிவு நீர் குளிகள் வெட்டப்பட்டு மூடப்படாமல் உள் ளது. இதனால், இப்பகுதி மக்கள் பழையபடி திறந்த வெளி கழிப்பிடங்களையே பயன்படுத்தி வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில் ;- கடந்த நான்கு மாதங்களாக கழிப்பிடங்கள் ஊராட்சி சார்பில் கட்டிக்கொடுத்து வருகின்றனர். இதனை பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தின் மூல மாக தனியார் ஒப்பந்த தாரர் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தது. ஒரு கழிப்பிடத்திற்கு ரூ.12ஆயிரம் அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட் டது . ஆனால், ஊராட்சி நிர்வாகத்தினர் அதனை தாங் களே கட்டித்தருவதாக கூறினர். ஒரே நாளில் 3 கழிப்பிட கட்டிடங்களை கட்டி முடித்தனர். இப்படி தர மில்லாமல் ஒரே நாளில் அவசர அவசரமாக கட்டினர். ஆனால் இரண்டு மாதங்களாகியும் இன்னும் செப்டிக் டேங்க் தொட்டிகள் வெட்டிப்படாமல் உள்ளது. இதனால் எங்களால் கழிப்பிடங்களை பயன்படுத்த முடியவில்லை. மேலும் ஒவ்வொரு கழிப்பிடத்திற்கும் ரூ.12ஆயிரம் தொகை ஒதுக்கப் பட்டும் கழிவுநீர் தொட்டி அமைக்காமல் உள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக கழிவுநீர் தொட்டி அமைத்து தரவேண்டும்.அப்பொழுது தான் நாங்கள் இந்த கழிவறைகளை பயன்படுத்த முடி யும்.அரசு இதனை கோரிக்கையாக ஏற்று உடனடி யாக கட்டப்பட்ட கழிப்பிடத்திற்கு கழிவுநீர் தொட்டி அமைத்து தர முன்வரவேண்டும். என தெரி வித்தனர்.