tamilnadu

img

வால்பாறை தியாகிகளுக்கு நினைவஞ்சலி

பொள்ளாச்சி, ஜன. 27- வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்க ளின் உரிமைகளுக்காக போராடி உயிரிழந்த தியா கிகளின் நினைவு தினத்தையொட்டி ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த வால் பாறை பகுதியில் 1957 ஆம் ஆண்டு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உரிமை மீட்பு பல்வேறு தீரம்மிக்க போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை ஒடுக்க காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். இத்தியாகிகளுக்கு வால்பாறை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.  இந்த அஞ்சலி நிகழ்விற்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் (சிஐடியு)  கோவை மாவட்ட செயலாளர் பி.பரமசிவம் தலைமை வகித்தார். இச்சங்கத்தின் மாவட்ட தலை வர் எம்.முனீஸ்வரி, சிபிஎம் ஆனைமலை தாலுகா செயலாளர் வி.எஸ்.பரமசிவம் ஆகியோர் சிறப்புரை யாற்றினார். இதில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் கள் சங்கத்தினர்  மற்றும் தேயிலைத் தோட்டத் தொழி லாளர்கள் சங்கம் (சிஐடியு)  உள்ளிட்ட திரளானோர் கலந்துக்கொண்டனர்.

;