வால்பாறை, ஆக. 1- வால்பாறை பூனாட்சி பகுதி யில் வசிக்கின்ற பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு மர்ம காய்ச்சல் அடுத்தடுத்து பரவி வரு வதால் நிரந்தர மருத்துவ முகாம் அமைக்க தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. கோவை மாவட்டம், பொள் ளாச்சி அடுத்த வால்பாறை வனச் சரகத்திற்குட்பட்ட பூனாட்சி செட்டில்மென்ட் பகுதியில் பழங் குடியின புலையன் சமூக மலை வாழ் மக்கள் வசித்து வருகின்ற னர். இந்நிலையில், இப்பகுதி யைச் சேர்ந்த 56 பேருக்கு மர்மமான முறையில் அடுத்த டுத்து வேகமாக காய்ச்சல் பரவி யது. இதுகுறித்து பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியரிட மும், கோவை மாவட்ட ஆட்சிய ருக்கும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் உடன டியாகத் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதனையடுத்து வியாழ னன்று மதியம் 2 மணியளவில் நடமாடும் மருத்துவக்குழு பூனாட்சி பகுதிக்குச் சென்றது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு மாத்திரை கள் வழங்கப்பட்டன. தேவைப் படுவோருக்கு ஊசிகள் மூலமாக மருந்து உடலில் செலுத்தப் பட்டது. மேலும், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. வாரமொரு முறை மருத்துவ முகாம் அமைத்திட வால்பாறை வனச்சரகத்திற்கென நடமாடும் மருத்துவக் குழு உள்ளது. இத னால் எவ்வித பயனும் இல்லை. முன்னர் பூனாட்சி மற்றும் மரப் பாலம் பகுதிக்கு வாரம் ஒரு முறை மருத்துவ குழு வந்து கொண்டி ருந்தது. ஆனால் தற்போது வருவ தில்லை. எனவே பழங்குடியின மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் உடனடியாக நிரந் தர மருத்துவ முகாம் அல்லது வாரம் ஒரு முறை கட்டாய மருத் துவ முகாம் நடத்த பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியரும், கோவை மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்கத்தின் தலைவர் வி. எஸ்.பரமசிவம் கோரிக்கை விடுத்துள்ளார் .