tamilnadu

பனியன் தொழிற்சங்கத்தினர் வாக்கு சேகரிப்பு

அவிநாசி ஏப்.8- நீலகிரி தொகுதி திமுகவேட்பாளர் ஆ. ராசாவுக்குஆதரவாக பனியன் தொழிற்சங்கத்தினர் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவேட்பாளராக ஆ. ராசா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக சிஐடியு , ஏ ஐ டி யு சி, எல் பி எப், எம் எல் எப், ஐஎன்டியுசி, எச்எம்ஸ் ஆகிய பனியன் தொழிற்சங்கத்தினர் திருமுருகன்பூண்டி, அவிநாசி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் சிஐடியு சார்பில் ஈஸ்வரமூர்த்தி,கணேஷ், ஏ ஐ டி யு சி சேகர்,சண்முகம், எல் பிஎப் ராமகிருஷ்ணன், பூப,தி ஐஎன்டியுசி சிவசாமி, எச்எம்எஸ்முத்துச்சாமி, எம்எல்எம்பெருமாள், கோவிந்தராஜ் உள்ளிட்ட அனைத்துசங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


;