கோவை, அக்.5- பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர் பாக மாநில பல்கலைக்கழக ஆசிரி யர் சங்கம் விடுத்துள்ள கோரிக் கைக்கு பாரதியார் பல்கலைக்கழக முதல்வர்கள் சங்கம் எதிர்ப்பு தெரி வித்துள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக காலியாகவுள்ள துணைவேந்தர் பதவிக்கு புதிய துணைவேந்தரை நியமனம் செய்ய ஆளுநர் பிரதி நிதி, சிண்டிகேட் உறுப்பினர்கள் பிரதிநிதி மற்றும் செனட் பிரதிநிதி என மூன்று உறுப்பினர்கள் கொண்ட தேடல் குழு அமைக் கப்பட்டது. இதில் இரு முன்னாள் துணைவேந்தர்களும், ஒரு ஐஏஎஸ் அதிகாரியும் உள்ளனர். இக்குழு துணைவேந்தர் நியமனத்திற்கான பணிகளை கவனித்து வருகிறது. இந்நிலையில் தனியார் கல்லூரி யில் பணி அனுபவம் பெற்ற ஒருவர் இந்த பதவிக்கு தகுதியில்லை என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு பாரதி யார் பல்கலைக்கழக முதல்வர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலை வர் கருணாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு முறைப்படியான அறிவிப்பு செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதிலிருந்து 10 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு நேர் காணலுக்கு அழைக்கப்பட்டுள் ளனர். இந்நிலையில், தனியார் கல் லூரிகளில் பணி அனுபவம் பெற்ற ஒருவர் இந்த பதவிக்கு தகுதி யில்லை என பல்கலைக்கழக ஆசிரி யர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், அவ்வாறு எந்த விதிமுறை களும் இல்லை. ஒரு சிலரை மட்டும் குறிப்பிட்டு பேசுவதும், ஆளு நரிடம் தேடுதல் குழுவை கலைக்க வேண்டுமென கோரிக்கை வைப் பதும் ஏதோ உள்நோக்கதுடன் செயல்படுவதாகத் தோன்றுகிறது. இதில் எந்த அடிப்படை முகாந் தரமும் இல்லை. தேடல் குழு சில முறையான விதிமுறைகளை பின் பற்றி 147 பேர் கொண்ட பட்டியலிலி ருந்து 10 பேர் கொண்ட பட்டியலை தெரிவு செய்துள்ளதாகத் தோன்று கிறது. எனவே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை மிகவும் வருந்தத்தக் கது. இவ்வாறுஅந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.