கோவை, ஆக. 30– மார்க்சிஸ்ட் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான விஎச்பி கோவை மாவட்டச் செயலாளர் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகம் காந்திபுரம் 2 ஆவது வீதியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மீது கடந்த 2017 ஆம் ஆண்டு அதிகாலை ஒரு கும்பல் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றது. இச்சம்பவம் தொடர்பாக சிசி டிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரிக்கையில், விஎச்பி மாவட்டச் செயலாளர் சரவணகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அதுதொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணைத் தாக்கி கழுத்தில் இருந்த தாலியை பறித்துச்சென்றதாக சரவணனை தற்போது காரமடை காவல்துறையின் மீண்டும் கைது செய் துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறு கையில், கோவை மாவட்டம், காரமடை காவல் நிலையத்திற்குட்பட்ட கெம்ப னூர் கிராமத்தில் கடந்த ஜூன் 25 ஆம் தேதி நான்குபேர் கொண்ட கும்பல் அரசு பள்ளி பெண் ஆசிரியர் வீட்டிற்குள் நுழைந்து ஆசிரியரை கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்து சென்றுள்ள னர்.
இச்சம்பவம் குறித்து ஆசிரியர் அனிதா காரமடை காவல் நிலையத் தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளி களைத் தேடி வந்தனர். இந்நிலையில் வியாழன்று காரமடை காவல்துறையினர் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தபோது ஆறுமுகம் என்பவரின் வாகனத்தை சோதனை செய் ததில் அது திருட்டு வாகனம் என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து மேலும் விசாரிக்கையில், ஆசிரியரைத் தாக்கி நகையை பறித்தது உள்ளிட்ட பல்வேறு திருட்டு, கொள்ளை சம்ப வங்களை பட்டியலிட்டுள்ளார்.
இச்சம்ப வங்களுக்கு மூளையாக செயல்பட்ட வர் விஎச்பி மாவட்டச் செயலாளர் சரவ ணகுமார் என்பதையும் தெரிவித்துள் ளார். இதனையடுத்து காரமடை காவல் துறையினர் விஎச்பி மாவட்டச் செயலா ளர் சரவணகுமார், ஆறுமுகம் மற்று மொரு விஎச்பி நிர்வாகி ரவீந்திரன் ஆகி யோர் கைது செய்து சிறையில் அடைத் தனர். மேலும் தலைமறைவாக உள்ள நாகராஜ் மற்றும் நடராஜ் ஆகியோரை தனிப்படை அமைத்து காவல்துறையி னர் தேடி வருகின்றனர்.
கைதான விஎச்பி மாவட்டச் செயலாளர் சரவணகுமார் பக லில் அந்த பகுதியில் உள்ள இளைஞர் களுக்கு யோகா உள்ளிட்ட போதனை களை வழங்குபவராகவும், இரவில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தற் போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.