கோவை. பிப், 14 - காதலர் தினம் வெள்ளியன்று கோவையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் பிப்.14 ஆம் தேதி காதலர் தினமாக கொண்டா டப்படுகிறது. இதன்ஒருபகுதி யாக வெள்ளியன்று கோவையி லும் காதலர் தினம் உற்சாக மாக கொண்டாடப்பட்டது. மேலும், கோவை தந்தை பெரி யார் திராவிடர் கழகத்தின் அலு வலகமான பெரியார் படிப் பகத்தில் இரண்டு காதல் இணை யர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.இதனைத்தொ டர்ந்து கு.ராமகிருட்டிணன் தலை மையில் காதலர் தினம் உற்சா கமாக கொண்டாடப்பட்டது. இதில் காதல் திருமணம் செய்து கொண்ட நூற்றுக்கும் மேற் பட்ட தம்பதிகள் தங்கள் குழந்தைகளுடன் பெரியார் படிப் பகத்தில் கூடினர். இதனையடுத்து காதலர் தின கேக் வெட்டி கொண் டாடினர். இதுகுறித்து கு.ராமகிருட்டி ணன் கூறுகையில், தந்தை பெரி யார், சாதி மறுப்பு திருமணத்தினால் மட்டுமே சாதிகளையும், அடிமைத்த னத்தையும் ஒழிக்க முடியும் என தீவிரமாக நம்பினார். அதனடிப்ப டையில் இப்பொழுது நிறைய மாற்றங்கள் சமூகத்தில் ஏற்பட்டுள் ளது. அதனால் தொடர்ந்து இது போன்ற சாதி மறுப்புத் திருமணங் கள் எங்கள் அலுவலகத்தில் நடந்து கொண்டே இருக்கும் எனக் கூறினார். இதேபோல், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக நீதி கட்சி சார்பாக காத லர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், கேக் வெட்டி பொதுமக்க ளுக்கு இனிப்புகளை வழங்கி காதலர் தின வாழ்த்துகளை தெரி வித்தனர். இதனைத்தொடர்ந்து சாதி மறுப்பு காதல் திருமணம் புரிந் தோருக்கு சாதியற்றோர் என இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த தனி சட்டம் இயற்ற வேண் டும்.முழக்கமிடப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.