tamilnadu

ஊத்துக்குளி ஆர்.எஸ். உயர்நிலைப் பள்ளி இட ஆக்கிரமிப்பை உடனடியாக மீட்டுத் தர பெற்றோர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

திருப்பூர், பிப். 24 – திருப்பூர் ஆர்.எஸ். பகுதியில் தரம் உயர்த்தப்பட்டுள்ள உயர் நிலைப் பள்ளிக்கு உரிய இடத்தை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தருமாறு அப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தி னர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் ஆட்சியர் அலுவல கத்தில் வாராந்திர மக்கள் குறை தீர் கூட்டம், ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் தலைமையில் திங்களன்று நடைபெற்றது. இதில் ஊத்துக்குளி ஆர். எஸ். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பெற்றோர்- ஆசிரியர் கழகத்தினர் அளித்த மனுவில், இப்பள்ளி 83 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள், பின்ன லாடை நிறுவனங்களில் பணி யாற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள்தான் பல ஆண்டு காலமாக படித்து வருகின்றனர். தற்போது இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட் டுள்ளது. இதற்கு கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது. ஏற்கெனவே இப்பள்ளிக்குச் சொந்தமான இடத்தைத் தனி யார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள் ளார். இதை மீட்டு பள்ளிக்குத் தரக் கோரி கடந்த ஆறு ஆண்டு காலமாக போராடி வருகிறோம். இதுவரை பல முறை மனு அளித்தும் பள்ளி இட ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. தற்போது தரம்  உயர்த்தப்பட்ட பள்ளியின் இடத் தேவையைக் கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்ப டையில் நடவடிக்கை மேற் கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட இடத்தை மீட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுபோல், திருப்பூர் மாநக ராட்சி அண்ணாநகர் பொது மக்கள் அளித்த மனுவில், கடந்த 70 ஆண்டு காலமாக அண்ணாநகர் பகுதி மக்கள் 25 பேர் அங்குள்ள சுடுகாட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு இந்த இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்புச் செய்தார். அந்த இடத்தை பொது மக்கள் அனைத்துக் கட்சியினர் மீட்டு வேலி அமைக்கப்பட்டது. வரு வாய்த் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அந்த இடத்தை அளந்து கொடுத்தனர். மேற்படி இடத்தை எப்போதும் போல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்த னர். எனவே அரசு தரப்பில் உறு தியளித்தபடி,  மக்கள் எப்போதும் போல் அந்த இடத்தை சுடுகாடாக பயன்படுத்திக்கொள்ள வரு வாய்த் துறையினர் அரசு பதி வேட்டில் பதிவு செய்திட வேண் டும் எனக் கேட்டுக் கொண்டனர்.  தமிழ்ப்புலிகள் கட்சியினர் அளித்த மனுவில், 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, கொலை வழக்கில், 7 பேர் 28 ஆண்டுகளாக சிறையில் இருக் கின்றனர். அவர்களை உடன டியாக விடுதலை செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். மேலும், கடந்த சில மாதங்க ளாக திரையரங்கு மற்றும் தொலைக்காட்சிகளில் திருப்பூர் அருகே சுல்தான்பேட்டையில் செயல்படும் தனியார் பின்ன லாடை நிறுவனத்தின் விளம் பரம் ஒளிபரப்பப்பட்டு வரு கிறது. குடும்ப சகிதமாக விளம்ப ரத்தை பார்க்க முடியாதபடி அந்த விளம்பரம் இருப்பதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்றும் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.