tamilnadu

img

குறைந்த விலையில் இந்தியாவிற்கு எரிபொருள் வழங்க அமெரிக்கா எதிர்ப்பு - சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியன் குற்றச்சாட்டு

நாமக்கல், செப். 29– குறைந்த விலையில் இந்திய ரூபாயில் எரிபொருள் தருகிற நாடுக ளின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாக சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியன் குற்றம்சாட்டியுள் ளார்.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ‘மார்க்சியம் வெல்லும்’ எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் ஞாயி றன்று நடைபெற்றது. இதில் பங் கேற்க வந்த சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் செய்தியா ளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,  இந்தியாவில் பொருளா தார நெருக்கடி என்பது உலக முதலா ளித்துவத்தின் நெருக்கடியின் ஒரு பகுதியாகும். 2000 ஆம் ஆண்டிலி ருந்து உலகமயம், தாராளமயம், தனியார்மயம்  போன்ற கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன.  பல நாடுகளில் அதிக பணப் புழக்கம் உள்ள வங்கி அமெரிக்காவில் உள்ளது.  இந்த வங்கி கொடுத்த கடனை வசூலிக்க முடியாததால் அதுவும் திவாலானது. அது குறித்த வழக்கு இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. அமெரிக்காவில் மிகப்பெரிய கார் உற்பத்தி தொழிற்சாலையான டெட்ராய்ட் திவாலானது. இந்நிலை யில்தான் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சென்னையை தொழில் நகரமாக மாற்றுவதாக பேசுகிறார் கள். ஆனால் தற்போதுள்ள தொழிற் சாலைகளே உற்பத்தி செய்ய முடி யாது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.   இந்நிலையில் எங்களிடம்தான்  பெட்ரோல் டீசல் வாங்க வேண்டும். வேறு யாரிடத்தில் யாரும் வாங்க  கூடாது என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் எவ்வளவோ முயற்சி செய்கி றார். மீறினால் அந்த நாட்டின் மீது  குண்டு போடுவது என மிரட்டி வரு கிறார். எல்லா நாடுகளிலும் மிரட்டி கையெழுத்து வாங்குகிறது அமெரிக்கா. தற்போது டிரம்ப் மீது பல்வேறு  குற்றச்சாட்டுகள் அந் நாட்டில் எழுந்துள்ளது. இப்போது கடைசியாக ஜனநாயகக் கட்சியின் சார்பில் அவர் மீது பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று விசாரணை குழு அமைத்துள்ளனர். டிரம்ப் மீது விசா ரணை நடைபெறுகிறது என தெரிந்த பிறகு இந்திய பங்குச் சந்தை அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. மேலும் பெட்ரோல் டீசல் விலையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. 

இது இந்தியாவின் கழுத்துக்கு  சுருக்கு கயிறு போடப்பட்டுள்ளது. மலிவான விலையில் இந்திய ரூபா யில் எண்ணெய் தர தயார் என கூறிய நாட்டின் மீது குண்டு போடுவேன் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் மிரட்டி வரு கிறார்.  சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் நேரடியாக கச்சா எண்ணெய்யை பெறு கின்றனர். சீனா ஐந்து மடங்கு செல்வ வளர்ச்சியில்  மிஞ்சி உள்ளது.  ஆனால் இந்தியாவில் ஆள் குறைப்பு, உற்பத்தி குறைப்பால்  2 லட்சத்து 37 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப் பட்டு உள்ளது. எனவே இந்தியா பொருளாதார நெருக்கடியில் சிக்கி அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது என்றார். மேலும் அவர் கூறுகையில்,  மத்திய அரசின் உத்தரவுகளை  நிறைவேற்று வதில் அடிமை அரசாக தமிழக அரசு உள்ளது. தக்காளி விலை ஏறுகிறது என்றால் அதனை தெருத்தெருவாக விற்போம். தங்கத்தையும் விற்க தயா ராக உள்ளனர். இதைபோல் பெட் ரோல், டீசல்  ரூ.30க்கு விற்க மோடி தயாரா என கேட்கிறோம்.  மோடிக்கு இதற்கான  அதிகாரமில்லை. இந்தியா வின் இறக்குமதியில் 70 சதவிகித  இந்த எண்ணெய்க்கும், தங்கத்திற்கும் ஒரு எல்லை உண்டு. அதை தடுக்க உரிமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. ஆனால் இந்தியா  கிடுக்கிப் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது.   மேலும், தமிழகத்தில் சீராக மழை பெய்யவில்லை. நமக்கு எப்பொழுதும் வடகிழக்கு பருவமழை  தான். ஆனால் பக்கத்து மாநிலங்க ளில் பெய்த கன மழையால் மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பியுள் ளது. ஆனால் பல ஏரிகளுக்கும் நீர்த்தேக்கங்களுக்கும் ஒரு சொட்டுக் தண்ணீர் கூட  வரவில்லை. காவிரி ஆற்றில் செல்லக்கூடிய வெள்ள நீர் கடலில் வீணாகச் சென்று கலக்கிறது. திருச்சி கொல்லிடம் வழியாக வரக் கூடிய நதிநீரும் கடந்த ஏழு நாட்களாக கடலில் வீணாகச் சென்று கலக்கிறது. ஆனால் தண்ணீரை சேமிப்பதற்கான ஏற்பாடுகள் ஏதும் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டில் எல்லா தொழிற்சாலைகளிலும் ஆட் குறைப்பு செய்துள்ளனர். டிவிஎஸ் கம்பெனி உட்பட ஒவ்வொரு தொழிற் சாலையும் அழிந்து கொண்டே வரு கிறது. இந்தியாவின் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்று கொண்டி ருக்கிறது.  இந்த தேக்கத்தை புரிந்து கொண்டு  அதனை தடுக்க வேண் டும். இதை சுட்டிக் காட்டினால் வழக் குகள் போடப்படுகின்றன. இதனை எதிர்த்து அனைத்து மதச்சார்பற்ற அணிகளும் சமரசமற்ற முறையில் ஒன் றினைந்து போராட வேண்டும் என்றார். முன்னதாக இக்கருத்தரங்கத்திற்கு ராசிபுரம் நகரச் செயலாளர் எஸ்.மணி மாறன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.குழந்தான், மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.மணிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.