கோவை, ஜூன் 12 – கோவை மாவட்டத்தில் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியலை வெளியிடாமல் கல்வித்துறை மௌனம் காத்து வருவது பல்வேறு சந்தேகங் களை எழுப்பியுள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரி மைச்சட்டம் 2009 பிரிவு 18ன் படி அனைத்து வகை பள்ளிகளும் அரசின் அங்கீகாரம் பெற்றே இயங்க வேண்டும். அவ்வாறு அங்கீகாரம் இல்லாமல் ஒரு பள்ளி செயல்பட்டால், அதில் படித்த மாணவர்களின் கல் வித்தகுதி பயனற்றதாகும். அதோடு, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படித்த மாணவர்கள் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக ளுக்கு நடத்தப்படும் பொதுத் தேர்வுகளை எழுத முடியாத சூழ லும் உருவாகும். இதனை கருத் தில் கொண்டு, தமிழகத்தில் மாநில பாடத்திட்டம் மற்றும் ஏனைய பாடத் திட்டங்களில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் மாநில அரசின் அங்கீகாரம் பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன் றமும் உத்தரவிட்டது. இந்நிலையில், அங்கீகா ரம் இன்றி செயல்படும் பள்ளி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதி காரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. மேலும், நடவ டிக்கை தொடர்பான அறிக் கையை ஏப்ரல் 23 ஆம் தேதிக் குள் சமர்ப்பிக்க வேண்டும் என் றும், அங்கீகாரம் இல்லாத பள்ளி களின் பெயர்களை செய்தித் தாள்கள் வாயிலாக பொதுமக்க ளுக்கு அறிவித்தது. இந்த அறி விப்பை அந்த பள்ளிகளின் முகப்பில் பொதுமக்களுக்கு தெரியுமாறு ஒட்ட வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே, கோவையில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை காரணம் காட்டி, தேர்தல் முடிந்த வுடன் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளின் விவரங்களை வெளியிடுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முரு கன் செய்தியாளர்களிடம் தெரி வித்திருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி பல நாட் கள் கடந்துவிட்ட போதிலும் அங் கீகாரம் பெறாத பள்ளிகள் தொடர்பான விவரங்களை மாவட்ட கல்வித்துறையினர் தற்போதுவரை வெளியிட வில்லை. மேலும், பள்ளி முகப் பில் அறிவிப்பும் வைக்கப்பட வில்லை. இதன் காரணமாக தங் கள் குழந்தைகள் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் தான் படிக் கிறார்களா? என்ற அச்சம் பெற் றோர்கள் மத்தியில் எழுந்துள் ளது. இதற்கிடையே, இதுகுறித்து கல்வியாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளில், கோவை மாவட்டத்தில் 113 இளம் மழலையர் பள்ளிகளும், 14 நர்சரி மற்றும் தொடக்க பள்ளிகளும் அங்கீகாரம் இல் லாமல் செயல்படுவதாக தெரி வித்திருந்தது. அதன்படி, கோவையில் மொத்தம் 127 பள் ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. மேலும், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டிய நிலை யில், 14 பள்ளிகள் அதனை புதுப் பிக்காமல் உள்ளன. இந்த பள்ளி களில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் தற்போது கேள் விக்குறியாகியுள்ளது.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:- அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளி கள் குறித்த விவரங்களை மாவட்ட கல்வி அதிகாரிகள் வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை கண்டும், காணா மல் இருப்பதுபோல் அங்கீகார மற்ற பள்ளிகள் குறித்த தகவலை வெளியிடாமல் மௌனமாய் இருப்பது பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது. இது கல்வித்துறை யின் மெத்தனமா அல்லது தனி யார் பள்ளிகளுக்கு காட்டும் கைமாறா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆகவே, பள்ளி, கல்லூரி இயக்குநரகம் உத்தரவையும் மதிக்காமல் செயல்படும் அதிகா ரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று பள்ளி களில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அங்கீகா ரம் இல்லாமல் செயல்படும் பள் ளிகளின் பட்டியலை பொது வெளியில் வெளியிட வேண்டும். மேலும், அப்பள்ளிகளில் படிக் கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க கல் வித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக் கின்றனர்.
- (ந.நி)