tamilnadu

img

அவிநாசி ஒன்றியத்தில் திறக்கப்படாத நூலகங்கள்

அவிநாசி, ஜூலை 7- அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள நூலகங்களை செயல்படுத்த வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றியத்தில் 31 கிராம ஊராட்சிகள் உள்ளது.இக்கிராமங்களில் திமுக ஆட்சி காலத்தில் அண்ணா மறுமலர்ச்சி நூலகம் அமைக் கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது வடுக பாளையம், கருவலூர், தெக்கலூர், சேயூர்   போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள நூலகங்கள் செயல் படுவதில்லை என வாசகர்கள், பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து வாசகர்கள் கூறுகையில், கிராமப்புறப் பகுதிகளில் பல ஆண்டுகளாக அண்ணா மறுமலர்ச்சி நூலகம் செயல்படுவதில்லை. நூலகம் செயல்பட்டு கொண்டிருந்த போது புத்தகங்களை பள்ளி குழந்தைகள் முதல் பெரியோர் வரை படித்துக் கொண்டிருந்தனர். தினசரி நாளிதழ்களும் வாசித்து வந்தனர். வாசகர்களுக்குப் பயனளிக்கும் வகையில் இருந்தது. எனவே, செயல்படாத நூலகங்களை மீண்டும் செயல்படுத்த மாவட்ட நிர்வா கத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.