tamilnadu

img

அடிப்படை வசதிகளின்றி தத்தளிக்கும் அன்னூர் ஊராட்சி

அன்னூர், நவ. 23-அன்னூர் ஊராட்சி பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப் படாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத் திற்குள்ளாகி வருகின்றனர். அன்னூர் ஒன்றியம், மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் 400க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின் றனர். இப்பகுதியில் கடந்த 20 நாட்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படாத தால் அப்பகுதியினர் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். இதன் காரணமாக குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே ,மாவட்ட நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப் படையில் குடிநீர் விநியோகம் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேருந்து வசதி வேண்டி மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் பெரும்பா லான கட்டிடத் தொழிலாளர்கள் கோவை நகரிலுள்ள சரவணம்பட்டி, கணபதி போன்ற பகுதிகளுக்கு நாள்தோறும் வேலைக்குச் சென்று வருகின்றனர். இத் தொழிலாளர்கள் வேலை முடிந்து ஊருக்கு  திரும்பி வர போதிய பேருந்து வசதி இல்லாத தால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வரு கின்றனர். ஆகவே,கோவை காந்திபுரம்  பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6  மணிக்கு புறப்படுகின்ற 81ஏ நகரப் பேருந்தை மசக்கவுண்டன் செட்டி பாளையம் ஊராட்சி வழியாக இயக்குவதன்  மூலம் கட்டிட தொழிலாளர்கள், அப்பகுதி யினர் பயனடைவார்கள். எனவே, இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், போக்கு வரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், மசக்கவுண்டன் செட்டிபாளை யம் ஊராட்சி முழுவதும் சாலைகள் பழுத டைந்து குண்டும், குழியுமாக காட்சிய ளித்து வருகிறது. இதேபோல், சாக்கடை வாய்கால்களும் பல இடங்களில் இடிந்த நிலையில் காணப்படுகிறது. மேலும், பொதுக்கழிப்பிடம் முறையாக பராமரிப் பில்லாத காரணத்தால் கடும் துர்நாற்றம் வீசுவாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு  உள்ளாகும் நிலை இருந்து வருகிறது. ஆகவே, இப்பகுதியில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
சுகாதார சீர்கேடு
அன்னூரை அடுத்த பொன்னே கவுண்டன்புதூர் கிழக்குப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்பிற்கு அரு காமையில் உள்ள பகுதியில் இருந்து வெளியேற்றப்படுகின்ற சாக்கடை நீர், பொன்னேகவுண்டன்புதூர் பகுதியில் தேங்கி சுகாதார சீட்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் முதியோர் தொடர்ந்து பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் பலமுறை முறையிட் டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தற்போது டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில்,  அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர்.
குவிந்துகிடக்கம் குப்பைகள்
பொன்னேகவுண்டன் புதூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாண வர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி யின் சுற்றுச் சுவர் அருகில் குப்பைகளை  கொட்டி வருகின்றனர். இதனால் பள்ளிக்  குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, இங்கு  குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடி யாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். - எம்.அருண்.