tamilnadu

போலி லாட்டரி சீட்டு விற்பனை - இருவர் கைது

கோவை, பிப். 12 -  தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு களை விற்பனை செய்து ஏமாற்றிய இரண்டு  பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறு கையில், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ(47). கூலி வேலை செய்யும் இவர் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் வாங்குவது வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் சாய்பாபா காலனி பகுதியில் இருக்கும் ஒருசில விற்ப னையாளர்களிடம் இவர் தொடர்ந்து லாட்டரி சீட்டுகள் வாங்கி வந்துள்ளார். ஆனால் இவருக்கு தொடர்ந்து பரிசுகள் வரா ததால் சந்தேகம் எழுந்துள்ளது.  இதனைத்தொடர்ந்து, மறுபடியும் லாட்டரி சீட்டை வாங்கிய பார்த்தபோது அச் சீட்டுகள் கலர் ஜெராக்ஸ் எடுத்தது போல் இருந்துள்ளது. மேலும், சந்தேகம் அடைந்த இளங்கோ விற்பனை செய்தவர்களிடம்  வாக்கு வாத்தத்தில் ஈடுபட்டுள்ளார். இத னால் ஆத்திரமடைந்த லாட்டரி விற்பனை யாளர்கள் கொலை மிரட்டலும் விடுத்துள்ள னர். இதனால் பயந்த இளங்கோ சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித் தார். இதனடிப்படையில், லாட்டரி சீட்டு விற்ற கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவின் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் அழைத்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டனர். இவ்விசாரணையில் கேரளா லாட்டரி சீட்டு களை போலியாக தயார் செய்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் சாய்பாபா காலனி  காவல் துறையினர் கைது செய்து சிறை யில் அடைத்தனர்.