மாவட்ட ஆட்சியர், எம்.பி.,யிடம் சிபிஎம் கோரிக்கை மனு
சேலம், அக.22- சேலத்தில் பராமரிப்பு இல்லாத மயானத்தை மின் மயானமாக மாற்றியமைக் குமாறு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர், நாடா ளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. சேலம் மாநகரம் 5ஆவது கோட்டம் அழகாபுரம், பெரியபுதூர் பகுதியில் பொது மயானம் பராமரிக்கப் படாமல் உள்ளது. மேலும், இந்த மயா னத்தில் விறகுகளை கொண்டு உடல் எரி யூட்டப்படுகிறது. இதனால் வெளியேறும் புகையால் மயானத்தை சுற்றியுள்ள குடி யிருப்புவாசிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, இம்மயானத்தை நவீன மின்சார தகனமேடையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், இப்பகுதியில் 30ஆண்டு களாக செயல்பட்டு வந்த சுகாதார மையத்தை விரிவு படுத்த மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு சுகா தார மையத்தை விரிவுபடுத்த மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்தும், தற்போது வரை எந்த பணிகளும் நடைபெறவில்லை. மாறாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுகா தார மையம் செயல்படாமல் பூட்டி வைக் கப்பட்டுள்ளது. இதனால் இதனை பயன் படுத்தி வந்த இப்பகுதி மக்கள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்ல வேண்டும் அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த அரசு சுகாதார மையத்தை மீண்டும் திறந்து கூடுதல் வசதிகளுடன் விரிவாக்கிட வேண்டுமென வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகரக் குழு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. இம்மனுவினை கட்சியின் மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார் தலைமை யில் மாநகரக்குழு உறுப்பினர் பி.செந்தில் குமார், கிளை செயலாளர் ஆர்.கே.சங்கர், டி.மனோகரன் ஆகியோர் அளித்தனர்.