tamilnadu

img

முகநூல் மூலமாக மதக்கலவரத்தை தூண்ட முயற்சி

கோவை, ஜூலை 14- மதக்கலவரத்தை தூண்டும் வகையில் முகநூலில்  கருத்துக்களை பதிவு செய்த இந்துத்துவா அமைப் பைச் சேர்ந்த நபர் கைது செய்யப் பட்டு கோவை சிறையில் அடைக்கப் பட்டார்.  கோவை மாநகர காவல்துறை யினர் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது  நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக முகநூல், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலை தளங்களில் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையிலும், மற்ற மதத் தினரை புண்படுத்தும் வகையிலும், இந்திய இறையாண்மைக்கு எதிரா கவும் தனது கருத்துக்களை பதிவிடு பவர்களையும் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின் றனர். மேலும், கண்காணிக்கப்படும் நபர்கள் மீது தவறு இருக்கும் பட்சத் தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இந்நிலையில், கோவை இராமநாதபுரம் கருணாநிதி நகரில் வசித்து வரும் ராஷ்ட்ரிய இந்து மகாசபாவின் மாநில  இளைஞரணி செயலாளராக உள்ள  மணிகண்டன் (37) என்பவர் தனது முக நூலில் ஹிந்து, முஸ்லிம் மதத்தினரி டையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், குறிப்பிட்ட மதத்தினரை கொலை செய்துவிடுவேன் எனவும் பதி விட்டுள்ளார்.  இச்சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின் பேரில், இராமநாதபுரம் காவல் ஆய்வாளர் லதா தலை மையிலான குழுவினர் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். மேலும், இவர் மீது இந்திய இறை யாண்மைக்கு எதிராக செயல்படல், மதக் கலவரத்தைத் தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள் ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.  மேலும், கோவையில் இது போன்று முகநூல், வாட்ஸ்ஆப் மூலம் மதக்கலவரத்தைத் தூண்டும் வகை யில் எவரேனும் செயல்பட்டால், கடு மையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள் ளனர்.