tamilnadu

img

மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்

கோவை, ஆக. 5- கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி கோவை வந்த இரண்டு லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்த னர். கோவை மாவட்டம், பிள்ளையார்புரம் பகுதியில் போத்தனூர் காவல் துறையினர் திங்களன்று வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேரளாவில் இருந்து வந்த இரண்டு லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போத்தனூர் காவல்துறை யினர் இரு லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.  லாரியில் மருத்துவ கழிவுகளா அல்லது என்ன வகையான கழிவுகள் என்பதை ஆய்வு செய்ய மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவையிலுள்ள குடோனிற்கு லாரியில் கழிவு களை ஏற்றி வந்ததாக லாரி ஓட்டுனர்கள் தெரிவித்துள்ள னர். இதுதொடர்பாக லாரி ஒட்டுநர்களான வடிவேல், சிவக்குமார் ஆகியோரிடம் காவல் துறையினர் தொடர்ந்து சாரணை நடத்தி வருகின்றனர்.