உதகை,பிப்.7- நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சன்ஷைன் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன் னாள் கிளை செயலா ளர் எம்.ஆர்.நடராஜன் இறப்பிற்க்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சன்ஷைன் பகுதியின் சிபிஎம் கட்சி முன்னாள் கிளை செயலாள ரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோத்த கிரி கமிட்டி பொருளாளர் பூவரசன் தந்தையுமான தோழர் எம்.ஆர்.நடராஜன் வியாழனன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், இவ ரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பி னர்கள் கே.மகேஷ், எம்.ஏ.வினோத், இடைக் கமிட்டி உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர் கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். கோத்தகிரி கைகாட்டி பகுதியில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இணைந்து பல்வேறு மக்கள் போராட்டங்களில் பங்கேற்றுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.