tamilnadu

img

தியாகி ரத்தினசாமி நினைவிடத்தில் அஞ்சலி

திருப்பூர், ஜன. 3- திருப்பூர் அருகே இடுவாயில் தியாகி ரத்தினசாமி நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜன.2 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.கணேசன் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து இடுவாய் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தியாகி ரத்தினசாமி நினைவிடத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

;