tamilnadu

img

உடுமலை அருகே சாலை விபத்தை ஏற்படுத்திய மரம் அகற்றம்

உடுமலை, ஆக. 30- உடுமலை மூணார் செல்லும் சாலையில் செங்குளம் முதல் பள்ளபாளையம் பெருமாள் கோவில் வரை தொடர் விபத்துகள் எற்பட்டு வந்தன. இதனைத் தடுக்க வளைவுகள் நிறைந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடப்பட்டது. இதனைத் தொடர்த்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்படுத்தும் சாலை வளைவுகளை நெடுச்சாலைத் துறையால் அகலப் படுத்தப்பட்டது. இப்பணியின் போது, மரங்களை முறை யாக அப்புறப்படுத்தாமல், மரத்தின் அடி பாகத்தை எடுக்கா மல் விட்டதால் மீண்டும் விபத்துகள் தொடர்ந்து. இதுதொ டர்பாக கடந்த புதன்கிழமை  தீக்கதிர் நாளிதழில்  செய்தி வெளியானது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை விபத்து ஏற்படுத்திய மரங்களை நெடுச்சாலைத் துறைனர் அப்புறப்படுத்தினர்.