tamilnadu

img

வாலிபர் சங்கத்தின் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

நெல்லையில் சாதி ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் சங்கத்தின் நிர்வாகி தோழர் அசோக் கின் முதலாம் ஆண்டு நினைவேந்தலின் ஒரு பகுதியாகவும், புரட்சியாளன் சேகுவேராவின் பிறந்த்தினத்தையொட்டியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய குழு மற்றும் கோவை வடக்கு நகர குழு சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ந.ராஜா,வடக்கு நகர தலைவர் நிசார் அகமது, நகர பொருளாளர் விக்னேஷ் மற்றும் ஒன்றிய குழு நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

;