tamilnadu

img

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவது, தொழிலாளர் சட்டங்களை மூன்றாண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது, தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்குவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி சென்னை அம்பத்தூர்,  திருவான்மியூர், வடபழனி, பல்லவன் இல்லம் உள்ளிட்ட பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சம்மேளன பொதுச் செயலாளர ஏ.ஆறுமுகநயினார் அம்பத்தூரிலும், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் திருவான்மியூர் பணிமனையிலும், சம்மேளன நிர்வாகி எம்.சந்திரன் வடபழனி பணிமனையிலும், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.தயானந்தம் பல்லவன் இல்லம் பணிமனையிலும் கலந்து கொண்டனர்.

;