tamilnadu

img

அன்னைத்தமிழை ஆட்சி மொழியாக்கு தமிழ்மொழிக் காப்பு கூட்டியக்கம் உண்ணாவிரதம்

கோவை, பிப். 29-  தமிழ்நாட்டில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக நடைமுறைப் படுத்தக் கோரி தமிழ் மொழிக் காப்பு கூட்டியக்கத்தினர் கோவை டாடாபாத் பகுதியில் சனி யன்று உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.  தொடக்கநிலைக் கல்வியில் தாய்மொழி வழியாகவே கல்வி வழங்கப்பட வேண்டும். தமிழக அரசு இதற்கான சட்டத்தை நிறை வேற்ற வேண்டும். தொடர்ந்து உயர்நிலை மற்றும் கல்லூரி கல் விகளில் தமிழ் வழி கல்வியை நடை முறைப்படுத்த ஆவண செய்ய வேண்டும். தமிழே ஆட்சிமொழி என்பதை தமிழக அரசு அனைத்து துறைகளிலும் நடைமுறைப் படுத்த வேண்டும். தமிழக அரசின் அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் பிற கோயில்களிலும் குடமுழுக்கு வழி பாடுகள் ஆகிய நிலைகளில் தமி ழையே பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், அரசு ஆணைப்படி முதல்மொழி யாக தமிழை பயன்படுத்த வேண் டும். தமிழே கற்றுத் தராத பள்ளி களில், தமிழ் மொழிப்பாடம் கற் றுத் தர தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். மராட்டிய அரசினை போன்று, தாய்மொழியில் கல்வி கற்றவர்களுக்கு தமிழக அரசுப் பணிகளில் 80 விழுக்காடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும். கர்நா டக மாநில அரசினை போன்று தமி ழக அரசு தமிழ்மொழி ஆணையம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட் டம் நடைபெறுவதாக தெரிவித்த னர்.  இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கவிஞர் சிற்பி, புல வர் அப்பாவு, திரைப்பட இயக்கு னர் வ.கவுதமன் உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.