ஈரோடு, மே 10-மின் இணைப்புகள் கொடுப்பதற்காக தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாததால் ஈரோடு காமராஜர் வீதி பகுதியில்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, ஈரோடு மாநகராட்சி கட்டிடத்திற்கு அருகே அமைந்துள்ளது காமராஜர் வீதி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்பகுதியில்மின்சார வாரியத்தினர் சாலையைத்தோண்டி புதைவடம் அமைத்துள்ளனர்.பணிகள் முடிவடைந்த நிலையில் தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாததால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனி மார்கட் பகுதியை சுற்றி வரும் இந்த தோண்டப்பட்ட சாலையால் அப்பகுதியில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை மின்வாரியத் துறை, மாநகராட்சி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பல முறை கோரிக்கை வைத்தும், இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி உள்ளனர். வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் எரிபொருள் மற்றும் கால விரயம், போன்றவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.