tamilnadu

திருப்பூர் முக்கிய செய்திகள்

இரண்டு வார்டுகளில்  யாரும் போட்டியில்லை

திருப்பூர், டிச. 21 - திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு ஊராட்சி வார்டு களில் யாரும் போட்டியிடாத நிலை ஏற்பட்டிருப்ப தாக மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரி வித்தார். தாராபுரம் ஒன்றியம் பொன்னாபுரம் ஊராட்சி வார்டு எண் 1 பெண்களுகாக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் ஆண் ஒருவர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே அந்த வார்டில் யாரும் போட்டியிடவில்லை. அதேபோல் மூலனூர் ஊராட்சி ஒன்றியம் கருப் பன் வலசு என்ற ஊராட்சியில் ஒரு வார்டில் போட்டி யிட இருவர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் இருவரும் பின்பு வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டனர். எனவே அங்கும் யாரும் போட்டியிடாத நிலை ஏற்பட்டுள்ளது என்று ஆட்சி யர் கூறினார். எனினும் கருப்பன் வலசு கிராமத்தில் போட்டி யிட்டவர்கள் ஏன் விலகிக் கொண்டனர் என்பது பற்றி தகவல் ஏதும் தெரியவில்லை.

மலைவாழ் மக்களின் வாக்குரிமை: விரைவில் உரிய தீர்வு- ஆட்சியர்

திருப்பூர்,  டிச. 21 - திருப்பூர் மாவட்ட மலைவாழ் மக்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாக்குரிமை இல்லாதது பற்றி மாநில தொகுதி மறுவரையறை குழுவின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருப்பதாகவும், இது பற்றி மாவட்ட வருவாய் அலுவலர் நேரடியாக கவனம் செலுத்தி வருவதாகவும், அவர்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்கு அனைத்து நடவடிக் கைகளையும் மேற்கொண்டிருப்பதாகவும் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சி யர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். மலைவாழ் மக்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாக்குரிமை இல்லாத நிலை தொடர்ந்து வருவது நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனையாக இருப் பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறியபோது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். இந்த உள்ளாட்சித் தேர்தலில் அவர்க ளுக்கு வாக்களிக்க முடியாவிட்டாலும் விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

திருப்பூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் ஆய்வு

திருப்பூர், டிச. 21 – திருப்பூர் மாவட்டத்தில் 13 இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில்  மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றி யங்களில் பதிவான வாக்குகள் 13 வாக்கு எண்ணும் மையங்களில் தனித்தனியே எண்ணப்படுகின்றன. அவிநாசி ஒன்றியத்திற்கு பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் ஒன்றியத்திற்கு தாராபுரம் சின்னச்சாமி மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உடுமைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப்பள்ளி, காங்கயம் ஒன்றியத்திற்கு நத்தக்கடையூர் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி, குண்டடம் ஒன்றியத்திற்கு குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உடுமலைப்பேட்டை தளி சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மூலனூர் ஒன்றியத்திற்கு மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பல்லடம் ஒன்றியத்திற்கு சின்னக்கரை பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொங்கலூர் ஒன்றியத்திற்கு தாராபுரம் ரோடு ஏஞ்சல் கல்லூரி, திருப்பூர் ஒன்றியத்திற்கு ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலைப்பேட்டை ஒன்றியத்திற்கு உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரி, ஊத்துக்குளி ஒன்றியத்திற்கு ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வெள்ளகோவில் ஒன்றியத்திற்கு வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 13 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப் பதிவு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்தில்  பாதுகாப்பாக வைத்திட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அறைகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று மின்வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சேவூரில் கஞ்சா விற்றவர் கைது 

அவிநாசி, டிச. 21-  அவிநாசி அருகே முறி யாண்டம்பாளையம் ஊராட்சி காந்திநகர் பகு தியை சேர்ந்தவர் சசிக் குமார் (25). இவர் சேவூர் வாலீஸ்வரர் கோவில் அருகே உள்ள குளப்பகுதி யில் கஞ்சா விற்பனை செய் வதாகப் சேவூர் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலையடுத்து சேவூர் காவல் துறையினர் மற்றும் தனி பிரிவு போலீ சார் அப்பகுதிக்கு சென்ற னர். அப்போது சேவூர் குளப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த சசிக்குமாரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டார்.