tamilnadu

திருப்பூர் மற்றும் இளம்பிள்ளை முக்கிய செய்திகள்

வெள்ளகோவில் பகுதிகளிலுள்ள குப்பைகளை அகற்றிடுக

மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், மே 30 – வெள்ளக்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களின் ஓரங்களில் பல வாரங்களாக குப் பைகள் அகற்றப்படாமல் தேங்கியிருக்கிறது. எனவே குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் வெள்ளக் கோவில் கிளை சார்பில் நகராட்சி ஆணையருக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 15 தினங்களுக்கு மேலாக குப்பைகளை அகற்ற தொழிலாளர்கள் வரவில்லை. குறிப்பாக அமராவதி நகர் மேல்நிலைத் தொட்டி அரு கில், சிவநாதபுரம் விநாயகர் கோயில் அருகில் குப்பை பெருமளவு தேங்கியுள்ளது. எனவே உடனடியாக குப்பை களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ள்ளது.

குடிநீர் குழாயை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை கோரி புகார்

இளம்பிள்ளை, மே 30- மகுடஞ்சாவடி ஏகாபுரம் ஊராட்சி  பகுதியில் குடிநீர் குழாயை சேதப்ப டுத்திய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி நிர்வாகத் தின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம் ஏகாம்பரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியிலி ருந்து காவிரி குடிநீர் அப்பகுதி மக்க ளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது. இந்நிலையில், ஊராட்சி நிர் வாகம் கடந்த வியாழனன்று முறை கேடான இணைப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கக் கொண்டு செல்லும் மெயின் குழாயை உடைத்து சேதப்படுத்தி உள்ளார். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தண்ணீர் விநியோ கம் தடைப்பட்டுள்ளது. எனவே, குழாயை சேதப்படுத்திய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி  ஏகாபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகத் தின் சார்பில் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் மீது காவல் அதிகாரிகள் விசா ரணை நடத்தி வருகின்றனர். இத னால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது

.