தாராபுரத்தில் 6ஆவது புத்தக திருவிழாவையொட்டி கலை, இலக்கிய திறனாய்வு போட்டிகள் மாணவர்கள் பங்கேற்க தமுஎகச அழைப்பு
தாராபுரம், ஆக.1 - தாராபுரத்தில் 6ஆவது ஆண்டு புத்தக திருவிழாவையொட்டி (ஆகஸ்ட் 4) கலை, இலக்கிய திறனாய்வு போட்டிகளில் மாண வர்கள் பங்கேற்குமாறு தமுஎகச அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் 6ஆவது ஆண்டாக புத்தக கண்காட்சி ஆக. 16ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை உடுமலை சாலையிலுள்ள சிவரஞ்சனி மகாலில் நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சியையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலை, இலக்கிய திறனாய்வு போட்டிகள் (ஆக.4) ஞாயிறன்று பொள்ளாச்சி சாலையி லுள்ள என்சிபி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இதில் கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகள் பல்வேறு தலைப்பு களில் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். மேலும் போட்டிகளில் வெற்றி பெறு பவர்களுக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று புத்தக திருவிழா அரங்கில் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் பரிசுகள் வழங் கப்படும். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 94421 64354, 98433 92274, 94867 09493, 98657 37874 ஆகிய எண் களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டுமென தமுஎகச சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
,மாதப்பூரில் மரக்கன்றுகள் நடும் விழா
திருப்பூர், ஆக.1- பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 13 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மாதப்பூர் கிராமத்தில் முத்துக்குமாரசாமி கோயிலுக்குச் சொந்தமான 13 ஏக்கர் பரப் பளவு நிலம் உள்ளது. இதில் பசுமையை உருவாக்கும் நோக்கில் வனம் இந்தியா பவுண்டேஷன் சார்பில் அப்பகுதியில் மரம் நடும் விழா புதனன்று துவங்கியது. இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனி சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி மற்றும் அரசு அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள், வனம் இந்தியா பவுண்டேஷன் உறுப்பினர்கள் கோவை ரோட்டரி சென்ட்ரல் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண் டனர். இந்நிகழ்ச்சியில் பசுமையை உரு வாக்கும் நோக்கில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் வேம்பு, பனை, அரசமரம், ஆலமரம் உள் ளிட்ட 1250 நாட்டு மரக் கன்றுகளும், 2000 அரளி விதை செடிகளும் என சுமார் 30 லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடப் பட்டது. முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேசு கையில், நீரின்றி அமையாது உலகு என்ற சொல்லுக்கு சான்றாக நீரை தருவிக்கும் மரங்கள் வளர்ப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும் அதனை தற்போது இந்த பகுதியில் செயல்படுத்திவரும் அமைப்பு களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் இந்த மரக்கன்றுகளை முறையாக பராமரித்து மிகப்பெரிய பூங்காவாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மணல் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு
அவிநாசி, ஆக.1- அவிநாசியை அடுத்த சேவூர் குட்டகம் அருகே மணல் ஏற்றி வந்த லாரி சிறை பிடிக்கப்பட்டது. அவிநாசியை அடுத்த சேவூர் அருகேயுள்ள குட்டகம் ஊராட்சியிலுள்ள குளத்தில் தினந்தோறும் சட்டவிரோதமாக அனுமதியின்றி மண் எடுத்துச் செல்லப் பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந் நிலையில் புதனன்று குட்டகம் செல்லும் சாலையில் மண் ஏற்றிவந்த டிப்பர் லாரியை விடுதலை சிறுத்தை கட்சியினர் சிறை பிடித்தனர். இதுகுறித்த தகவறிந்த காவல் துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலு வலர் ஆகியோர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, திருப்பூர் கனிம வளத்துறையினர் ராகியப்ப கவுண்டர் தோட்டத்திலிருந்து 600 லோடு மணல் எடுப்பதற்கு அனுமதிக்கப் பட்டிருப்பதாக ஆவணத்தை காட்டினர். இதனை ஏற்றுக்கொள்ளாத போராட் டக்காரர்கள் மணல் ஏற்றி வந்த லாரியை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று உரிய விசாரணை நடத்திட வேண்டும் என வலியுறுத்தினர். இதை யடுத்து மணல் ஏற்றி வந்த லாரி வட்டாட் சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்த பிறகே அனை வரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கருப்புசாமி, சிவ குமார் ஆகியோர் கூறுகையில், தனி நபர் தோட்டத்தில் மணல் எடுக்க அனுமதி யில்லை. இந்நிலையில் முறைகேடான அரசு ஆவணத்தை வைத்துக் கொண்டு தப்பித்து செல்ல முயற்சிக்கின்றனர். ஆகவே, உடனடியாக குட்டகத்தில் உள்ள குளத்தை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.