tamilnadu

img

ஒரே பகுதியில் மூன்று மதுக்கடைகள் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவை, அக். 14 –  கோவில்மேடு பகுதியில் அருகருகே செயல்பட்டு வரும் 3 டாஸ்மாக் கடை களை மூடக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. கோவை மாவட்டம், கோவில்மேடு பகுதியில் 1602, 1611, 1625 ஆகிய எண் ணிட்ட 3 டாஸ்மாக் மதுக்கடைகள் பேருந்து நிலையத்தின் அருகே செயல்பட்டு வருகி றது. இக்கடைகள் காரணமாக அப்பகுதி யில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு  சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, இக்கடைகளை அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  திங்களன்று அப்பகுதி பொதுமக்கள், தமிழ்புலிகள் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மஞ்சள் சாகுபடிக்கு மானியம்
கோவை மாவட்டத்தின் பெரும்பாலான புறநகர் பகுதிகளில் மஞ்சள் விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளில் மஞ்சள் விவசாய பரப்பு பல ஆயிரம் ஏக்கரில் இருந்து சில நூறு ஏக்கர்களாக குறைந்துள்ளது. குறிப்பாக, மஞ்சள் குவிண்டாலுக்கு கடந்த 10 ஆண்டு களில் ரூ.5,500 முதல் ரூ.8,500 வரை இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங் களில் விலைகள் ரூ.6,500 குறைந்துள் ளது. மஞ்சள் விவசாயத்தை ஊக்குவிக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை.  ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மஞ்சளை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெறலாம் என விதி இருந்தாலும் அதனை விவசாயிகள் முழுமையாக பயன் படுத்திக் கொள்ள முடியாத நிலை உள்ளது. விற்பனை கூடங்களில் போதிய இருப்பு வைக்கும் வசதிகள் இல்லாததே இதற்கு காரணம். இப்பிரச்சனையை தீர்க்க 100 சதவிகித மானிய விலையில் மஞ்சள் விதை கள் தருவதோடு, உற்பத்தி செலவீனங்களை அரசே முழுமையாக ஏற்க வேண்டும் எனக் கோரி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காற்று மாசை அளவிடும் பணியை நீட்டிடுக
கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதி யில் காற்று மாசை அளவிடுவதற்கான கருவி அமைக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் தற்போது அப்பகுதியில் மழை பெய்து வருவதால் காற்றில் இருக்கும் பேர் டஸ்ட் எனப்படும் மாசின் அளவு குறைவாக இருக்கும். மேலும் தற்சமயம் செங்கல் சூளை அதிபர்கள் சூளைகளை இயக்காமல் இருப்பதால் மாசின் அளவுகளை முழுமை யாக அளவிட முடியாது. எனவே, தற்போது எடுக்கப்படும் மாசு அளவுகளால் எந்த பய னும் ஏற்படப்போவதில்லை. ஆகவே, இதனை 6 மாதங்கள் வரை நீட்டிக்கும் பட்சத்தில், மீண்டும் சூளைகள் இயக்கப் பட்டு, லாரிகளின் இயக்கமும் அதிகரிக் கும்போது உண்மையான அளவுகளை அறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கோரி விவசாய சங்கத்தினர் மனு அளித் தனர்.