tamilnadu

img

கார் விபத்தில் மூவர் உயிரிழப்பு

அவிநாசி, டிச. 2- அவிநாசி அருகே பெருமாநல்லூரில் திங்க ளன்று நடைபெற்ற சாலை விபத்தில் மூவர் உயி ரிழந்தனர்.  ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த வர் மோகன். இவர் தனது  மனைவி கவிதா, மகன் கட்டிட பொறியாளரான பாரத் (24) மோகனின் தம்பி லோகு(47), அவரது மகன் அமர்நாத் (18) ஆகியோருடன்  ஞாயிற்றுக்கிழமை  கோவை மாவட்டம் சூலூரில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றார். திங்களன்று  வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில்  காரை பாரத் ஓட்டி வந்தார். பெருமாநல்லூர் ஆறு வழிச் சாலையில் ஆதியூர் பிரிவு அருகே செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்த  கார் நிலைதடுமாறி சாலை யின் ஓரம்  இருந்த தடுப்பு சுவர் மீது மோதி  விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில் பாரத் மற்றும் லோகு ஆகியோர் நிகழ்விடத்திலேயே  உயிரிழந்தனர்.  மோகன், கவிதா, அமர்நாத் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மூவரும் மீட்கப்பட்டு திருப்பூர் தனி யார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.  இதில் மோகன் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் உயிரிழந்தார்.  இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.