கோவை, செப்.10– கோவையில் மூன்றாவது திரு மணம் செய்ய முயன்ற கணவரை முதல் இரண்டு மனைவிகள் அடித்து இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம், சூலூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜ் என்பவரது மகன் அரங்க அரவிந்த தினேஷ் (26). இவர் ராசிபாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பேட்டன் மேக்கராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் கணபதி பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள் பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. இந்நிலையில் அரவிந்த் திருமணமான 15 நாட்களிலேயே தனது மனைவியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து பிரி யதர்சினி சூலூர் காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளார். சூலூர் காவல்துறையினர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலை யத்திற்கு அனுப்பி வைத்துள்ள னர். அங்கும் புகார் அளித்த பிரிய தரசினி திருப்பூரில் உள்ள தனது அப்பா வீட்டில் தற்போது வசித்து வருகிறார். இந்நிலையில் அரங்க அர விந்த், கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவரது மகள் அனுப்பிரியா (23) என்பவரை சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதன்பின் அனுப் ரியாவையும் அவர் கொடுமைப் படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது மனைவி அனுப்பிரியாவும் இவர் களது தொல்லை தாங்க முடியா மல் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அரங்க அர விந்த், மூன்றாவதாக திருமணம் செய்ய மணமகள் தேடி வலைத் தளத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த தகவலை அறிந்த முதல் மனைவி பிரியதர்ஷினி குடும்பத் தினரும், இரண்டாவது மனைவி அனுப்பிரியா குடும்பத்தினரும் அரங்க அரவிந்த் பணியாற்றும் கோவை சூலூரிலுள்ள தொழிற் சாலையின் முன்பு தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை யடுத்து நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த அரவிந்தனை அவரது முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி இருவரும் ஆவேசமடைந்து அடித்து உதைத் தனர். இதன்பின் சூலூர் காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்று ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.