tamilnadu

img

சட்ட மன்ற கட்டிடம் இல்லை, குறைகளும் கேட்பதில்லை

ஈரோடு, ஜன. 10- அந்தியூர் சட்டமன்ற அலுவலகம் கடந்த 8 ஆண்டு களாக திறக்கப்படாததால், பொதுமக்கள் தங்கள்  குறைகளை கூறமுடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அண்ணாமடுவு என்னும் பகுதியில் கட்டப்பட் டுள்ளது. 2000 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் கடந்த 8 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது.  இதன் பின்னர் அலுவலகம் பலமுறை பராமரிப்புகள் செய்யப்பட்டு பாதுகாப்பு பணிகளும் செய்யப்பட்டது. இருப்பினும், தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக் கும் அதிமுகவைச் சேர்ந்த இ.எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் சட்டமன்ற அலுவலகத்தை இதுவரை திறக்கவில்லை. பொதுமக்களை சந்தித்து மனுக்களும் பெறுவது இல்லை. அதற்கு பதிலாக, அவர் பயணியர் மாளிகை யினை அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். ஆனால், பொதுமக்கள் அங்கு செல்லாமல் சட்டமன்ற  உறுப்பினர் அலுவலகம் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் போதிய பாதுகாப்பு இல்லா மல் இருப்பதால் அதனை உடனடியாக இயக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

;