tamilnadu

img

சமூகத்தில் நிராகரிப்பை சந்திப்பவர்களின் குரல்...

கொரோனா வைரஸ் வேக மாகப் பரவிவரும் சூழலில் உலகெங் கிலும் உள்ள மக்கள் யாவரும் தங் கள் வாழ்வாதாரத்தை காத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக் கும் அதே வேளையில், திருநம்பிகள், திருநங்கைகள் என அழைக்கப்படும் மாற்றுப் பாலினத்தாரின் நிலை இன் னும் மிகவும் மோசமாகவே உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, அவர்களின் உரிமைகள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் முதன்முதலில் நடத்திய ஆய்வின்படி, மாற்றுபாலினத்தார்களில் சுமார் 92 சதவிகிதம் பேர் நாட்டில் எந்தவொரு பொருளாதார நடவடிக்கைகளிலும் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும் உரி மையை இழந்து தவிக்கின்றனர். உரிய திறன், தகுதி வாய்ந்தவர்கள் கூட வேலை செய்வதற்கு மறுக்கப்ப டுவதாக ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.

 2011 மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி, மாற்றுபாலினத்தார் களின் மொத்த எண்ணிக்கை 4.8 லட்சம் என்றும், இதில் 30 ஆயிரம் பேர் மட்டுமே தேர்தல் ஆணையத் தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மை யில், இந்தியாவில்  மாற்றுப் பாலினத் தவர்கள் சுமார் 50 முதல் 60 லட்சம் பேர் வரை இருப்பதாக மதிப்பீடு கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கி யமான காரணம், சமூகத்தில் தாங்கள் சந்திக்கவிருக்கும் பாகுபாட்டுக் கொடுமைகளை தவிர்ப்பதற்காக பாலின அடையாளத்தை ரகசியமா கவே வைத்துக்கொள்வதே ஆகும். இதனை உடைத்து கௌரவமான வாழ்க்கை முறையின் மூலம் தலை நிமிர்ந்து வாழும் பல மாற்றுபாலினத் தார்களும் இருக்கத்தான் செய்கிறார் கள். அவ்வகையில், கோவையில் உக்கடம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பிரியாணி செய்வதற்கு பெயர்போன பல மாற்றுபாலினர் தார்களை சந்தித்தபோது...

அவர்கள்தான்....
20 வருடமாக பிரியாணி செய்து வரும் செல்வி என்பவர் கூறுகையில், எனக்குக் குடும்பம் என்பது, என்னால் சமைக்கும் தொழில் சொல்லிக் கொடுக்கப்பட்டு என்னோடு வாழ்ந்து வரும் மாற்றுபாலினத்தார் களே, அவர்கள்தான் என் மகள்  மற்றும் பேத்திகளாவர். எனக் கென இருக்கும் குடும்பமும் நான் கௌரவமாக வாழ்வதால் என்பக் கம் இருந்தாலும், நான் இவர்களி டமே வசித்து வருகிறேன். 10 பேராக ஒன்றாக வாழும் நாங்கள் அவ ரவர் குடும்பரீதியாக என்னென்ன சாதி, மதமோ எனக்குத் தெரியாது. ஆனால், வாழும் சூழலைப் பொறுத்த வரை நாங்கள் அனைவரும் உழைக் கும் திருநங்கை ஜாதி. இதுவே எங்கள் அடையாளமாக நாங்கள் கருது கிறோம். என்னைப்போலும் என் னோடு இருப்பவர்கள் போல் கோவையின் பெரும்பான்மையான பகுதிகளில் கௌரவமாக வாழும் பல திருநங்கையர்கள் உள்ளோம். எங்க ளுக்கென உள்ள நலச்சங்கம் அவ்வப் போது எங்களுக்கு உதவியும் வருகி றது. ஆகவே நாங்கள் எங்கள்கைக ளைத் தவிர எதையும் எவரையும் சாரா மல் கௌரவமாக வாழ்ந்து வருகி றோம். இவ்வாறு செல்வி கூறினார்.

கேலி செய்தவர்கள்...  அசந்து போகின்றனர்...
சிறுகச்சேர்த்த பணத்தின் மூலம் கடந்த சனியன்று பிரியாணி கடை யைத் திறந்த தஸ்லிமா என்பவர் கூறு கையில், நான் கடந்த 20 வருடங்க ளாக பிரியாணி செய்து வருகிறேன். ஆரம்ப காலத்தில், என் பாலியல் அடையாளத்தால் முதலில் வீட்டா ராலேயே ஒதுக்கப்பட்டு விரட்டப் பட்டேன். பின்னர் திருநங்கைகள் சிலர் என்னை இங்கு அனுப்பி வைத் தனர். அதிலிருந்து நான் இத்தொ ழிலை ஆர்வமாக கற்றுக்கொண்டு  இன்று நன்றாக இருக்கிறேன். ஆரம் பத்தில் என் வெளித்தோற்றத்தை கேலி செய்தவர்கள் எல்லாம் இன்று என் கைப்பக்குவத்தால் அசந்து போகின்றனர். இத்தொழிலால் கிடைத்த மரியாதையும், பொருளா தார ஒத்துழைப்பும் தான், நான் இந்த கொரோனா நெருக்கடியிலும் நல மாக இருப்பதற்குக் காரணம். இருப் பினும், அரசு எங்களுக்கு செய்ய வேண்டியதில் சற்று கூடுதல் கவ னம் செலுத்த வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். காரணம், உக்கடத் தின் ஒருபுறம் நாங்கள் பிரியாணிக்கு பேர் போனவர்கள் என்றிருக்கும், அதே சமயத்தில் உக்கடம் பேருந்து நிலையத்தில் சில மாற்றுபாலி னத்தார்கள் பிச்சையெடுத்தும் வரு கிறார்கள். இந்நிலையை, அரசாலும் சமூக மாற்றத்தாலும்தான் சரி செய்ய முடியும், என்கிறார் தஸ்லிமா...

விரட்டியடித்த குடும்பமும் வரவேற்கும்
அதேபகுதியில் பிரியாணி செய் யும் சரோ என்பவர் கூறுகையில், 21 வயதில் நான் எங்கள் வீட்டாரால் புறக்கணிக்கப்பட்டு திருச்சியிலி ருந்து கோவைக்கு பிழைக்க வந் தேன். ஆரம்ப நாட்களில் ஒரு தனி யார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தேன். பின்னர் அங்கும் நான் மாற்றுபாலினத்தார் என அறியப்பட்டதும் விரட்டியடிக்கப்பட் டேன். பாலியல் தொழிலில் விருப்ப மில்லாத எனக்கு உழைக்க வேண்டும் என்னும் எண்ணமே பிரியாணி செய் யும் ஒரு மாற்றுபாலினத்தார் மூலம் இத்தொழிலை கற்றுக்கொண்டு 6 மாதத்தில் பிரியாணி மாஸ்டராக என்னை உயர்த்தியது. தோற்றத்தால் விரட்டிய என் குடும்பமே இத்தொழி லால் என்னை மீண்டும் அரவணைத் துக் கொண்டது.என்னைப் பொறுத்த வரை எங்களுக்கு திருநம்பி, திரு நங்கை, மாற்றுபாலினத்தார் என்று பெயர் வழங்குவது மட்டும் எங்களை கௌரவப்படுத்தி விடாது, எங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அர சாலும்,சமூகத்தாலும் எடுக்கப்ப டும் முயற்சியே எங்களை உண்மை யில் கௌரவப்படுத்தும்.

எங்களைப் போல் உழைப்பால் முன்னேறிய பல மாற்றுபாலினத்தார் இருந்தும் சமூகத்தால் மிகப்பெரும்பான்மை யான இடங்களில் நாங்கள் ஒதுக் கப்பட்டே வந்துள்ளோம். பாலியல் தொழில் செய்வது நிச்சயமாக தவறா னதும், தண்டிக்கப்படக் கூடியதும் ஆகும். ஆனால், இங்கு மாற்றுபாலி னத்தவர்களில் 99 சதவிகிதம் பேர் வீட் டால் விரட்டியடிக்கப்பட்டு நடுத்தெ ருவில் நிற்கும்போது அடுத்த வேளை  உணவிற்காக அவர்கள் அத்தொ ழிலை செய்ய நிர்பந்திக்கப்ப டுகிறார்கள் என்பதையும் உணர வேண்டும். சூழ்நிலைக் கார ணங்களால் சாலைகளில் பிச்சையெ டுப்பவர்களில் ஆண்களும், பெண்க ளும்தான் உள்ளனர். ஆனால் எங்க ளைப் போன்றோரை மட்டும் வித்தி யாசமாக பார்ப்பதை என்னவென்று சொல்வது ? அதனை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங் கள் நிலைமையைப் பொறுத்தவரை, சராசரியான ஒரு மனிதனுக்கு தங்கள் குடும்பத்தை மட்டும் பார்த்தால் போதும், ஆனால் நாங்கள் எங்க ளுக்குக் கீழே வேலை செய்யும் மற்றும் எங்களோடு வாழும் திருநங்கையர் என இரு குடும்பத்தைப் பார்த்தாக வேண்டும். இருப்பினும் திருப்தி யான இவ்வாழ்க்கை முறையால் எவ் வளவு கஷ்டம் வந்தாலும் நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம், இவ்வாறு அவர் கூறினார்.

பாலினம் எதுவானாலும் உழைத்தால் மட்டுமே உணவு
20 ஆண் மற்றும் பெண்களை வைத்து பிரியாணி செய்துவரும் நூரி என்பவர் கூறுகையில், எனக்கு முன் னால் இவ்வேலை செய்துவந்த திரு நங்கைகள் எங்களுக்கென ஒரு நற் பெயரை உருவாக்கிவைத்து விட்டுப் போனதால் இவ்வழியில் நாங்கள் உயர, எங்களுக்கு பெரியதடை எது வும் இருக்கவில்லை. இதனால் ஆணோ, பெண்ணோ, மாற்றுபாலி னத்தாரோ அவரவர் உண்ண வேண் டுமேனில் உழைத்தாக வேண்டு மென்ற உண்மை எனக்கு விளங்கி யது. எங்களுடைய பிழைப்பைப் பொறுத்தவரை ஆறுமாதம் கல் யாண சீசன் இருக்கும். அப்போது வரும் வருமானத்தை வைத்துதான் ஆண்டு முழுவதும் சமாளிப்போம்.

இச்சமயத்தில், அந்த ஆறுமாத கால வருமானமும் தடைபட்டதால் எங்கள் பாட்டை ஓரளவு சமாளித்தாலும், எங்கள் கீழுள்ள பணியாளர்களுக்கு உதவுவது தான் சற்று சிரமமாக உள்ளது. இருப்பினும் சேமிப்பு மற் றும் கடனை வைத்து சிறிது உதவி வருகிறோம். எங்களுக்குக் கூட தற் போது திருநங்கை நலச்சங்கத்திலி ருந்து ஆயிரம் ரூபாய் கிடைக்கப் பெற்றோம். ஆனால், அரசு சாதாரண மக்களுக்கு முறையாக உதவ வேண் டிய கடமையிலிருந்து தவறி விட்ட தாகக் கருதுகிறேன், இவ்வாறு அவர் கூறினார். மனித உரிமை ஆணையம் நடத் திய ஒரு ஆய்வில், இந்தியாவில் மாற் றுபாலினத்தார்களில், சுமார் 99 சதவி கிதத்தினர் ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் சமூக நிராகரிப்பை அனுபவித்துள்ளனர் என்ற உண்மை யோடு, 96 சதவிகிதத் திருநங்கைக ளுக்கு அவர்களின் பாலின அடை யாளத்தாலேயே வேலை மறுக்கப்படு கிறது என்ற உண்மையையும் வெளிக் கொண்டு வந்துள்ளது.

ஆக சாதா ரண நாட்களே இவர்களுக்கு போ ராட்டக் களமாக இருக்கும்போது இக் கொரோனா காலகட்டத்தில் இவர்க ளின் நிலை நிச்சயம் கவலைக்கிடமா னது என்பது யாவரும் அறிந்ததே. இந் நிலையிலும் உழைத்து தான் மட்டு மல்லாது தன்னை நம்பியுள்ளோரும் சாப்பிட வேண்டும் என்ற எண்ண மும், தங்கள் வாழ்வாதாரமே பாதிக் கப்பட்டுள்ள இச்சமயத்திலும் சாதா ரண மக்களைப் பற்றிக் கவலைப்ப டும் இவர்களின் மனமும், இவர்களை பொது இடங்களில் கேலிகளுக்குள்ளாக்கும் நபர்களுக்கு என்றைக்குமே இருந்தது இல்லை என்பதே உண்மையாகும்.

-ச.காவியா