tamilnadu

img

பிஎஸ்என்எல்-ஐ பாதுகாக்க போராட்டம் தொடரும்!

பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தலைவர் எஸ்.செல்லப்பா உறுதி

திருப்பூர், அக். 16 - பிஎஸ்என்எல் நிறுவனத்தையும், அதன் ஊழியர்களையும் பாதுகாப்ப தற்காக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் உறுதிமிக்க முறையில் தொடர்ச்சியா கப் போராடும் என்று தேர்தல் பணி நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா கூறினார். திருப்பூர் மெயின் தொலைபேசி நிலைய வளாகத்தில் புதன்கிழமை பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தேர்தல் பணிக்குழு சார்பில் நன்றி அறிவிப்புக் கூட்டம் நடைபெற்றது. பி.பி.புதூர் கிளைச் செயலாளர் உண்ணிகிருஷ் ணன் தலைமை ஏற்க, மாவட்ட நிர் வாகி விஸ்வநாதன் வரவேற்றார். இதில் பங்கேற்று தேர்தலில் சங்கத்தை வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றி தெரிவித்து எஸ்.செல்லப்பா பேசுகை யில் கூறியதாவது: பிஎஸ்என்எல் சங்க அங்கீகாரத் தேர்தலில் தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெற்றி ருப்பது சாதனையாகும். குறிப்பாக நிர்வாகமும், பிற சங்கங்களும் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் வெற்றி யைத் தடுக்க அவதூறுகள், பொய்  பிரச்சாரங்கள், பல சதிகள் செய்தபோ தும், அதை மீறி வெற்றி பெற்றிருக் கிறோம். பிஎஸ்என்எல் நிறுவனத் தைப் பாதுகாக்கவும், ஊழியர் நலன் களை பாதுகாக்கவும் சங்கம் உறுதி யாகப் போராடும். மேலும் வரும் 18ஆம் தேதி அகில இந்திய உண்ணாவிரதப் போராட் டத்தை வெற்றி பெறச் செய்வது டன், ஜனவரி 8ஆம் தேதி மத்திய  தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத் தப் போராட்டத்திலும் பிஎஸ்என்எல் ஊழியர்களைப் பங்கேற்கச் செய்து  வெற்றி பெறச் செய்வோம் என்று எஸ். செல்லப்பா கூறினார். இந்நிகழ்வில் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் சி.ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் ஏ.முகமது ஜாபர், மாநில அமைப்புச் செயலாளர் பழனிக்குமார், ஈரோடு மாவட்டச் செயலாளர் சி.மணி ஆகியோர் உரை யாற்றினர். மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி இம்மாதம் பணி ஓய்வு பெறும் ஊழியர்கள் மாரி முத்து, ராஜன் ஆகியோர் கௌரவிக் கப்பட்டனர். இக்கூட்டத்தில் திரளா னோர் கலந்து கொண்டனர்.