உதகை, டிச.20 - மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறை வேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப் பாட்டம் மற்றும் கடைய டைப்பு போராட்டங்கள் நடைபெற்றன. நீலகிரி மாவட்டம், பந்தலூரில் மக்கள் ஒருங் கிணைப்பு குழுவினர், மத்திய பாஜக அரசு நாடாளு மன்றத்தில் நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியு றுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பந்தலூர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி தலைமை வகித்தார். மக்கள் ஒருங்கி ணைப்பு குழுவின் தலைவர் மணிகண்டன், கன்வீனர் டி.ரமேஷ், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி அனுஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி புவனேஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பாபு, ஜினி,முகமது சம்சுதீன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் நிர்வாகி இளங்கோவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிர்வாகி முகமது, பந்தலூர் நகர வியா பாரிகள் சங்கத்தின் தலைவர் அஷ்ரப் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக, பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் அருகில் இருந்து பழைய பேருந்து நிலையம் முன்பு வரை பேரணி யாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இப்பகுதியில் உள்ள வியாபாரிகள் கடைகளை அடைத்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதேபோல், தேவர் சோலை பஜாரிலும் வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கே.பி.சியாத்ஞானி தலைமை வகித்தார்.ஜமாஅத் கமிட்டி உறுப்பினர் கே.சி.அசைனர், திமுக நிர் வாகிகள் மாதேவு, சுப்பிரமணி, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஜே.பி.முகமது, செய்யது முகமது,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ஞானசேகரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிர்வாகி அனிபா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி எச்.நாசர், ஸ்ரீ சுப்பிர மணியார் கோவில் கமிட்டி உறுப்பினர் கே விஜயன் உள்ளிட்டோர் கண்டன உரை ஆற்றினர். இதில் ஐநூறுக்கும் மேற்பட் டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங் களை எழுப்பினர்.