tamilnadu

img

மங்களாம்பாளையத்தில் அனைத்து பேருந்துகளும் நிற்கவேண்டும்

தாராபுரம்,  ஜூலை 9- தாராபுரம் அடுத்த மங்களாம்பாளை யத்தில் அனைத்து பேருந்துகளும் நிற்க வேண்டும். மேலும் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி சார் ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தாராபுரம்-பழனி சாலையில் உள்ள மங்களாம்பாளைத்தில் அனைத்து பேருந்து களும் நிற்கவேண்டும். வேகத்தடை அமைத்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மங்களாம்பாளையம் கிராம பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சார் ஆட்சியர் பவன்குமாரிடம் அளித்த மனுவில், மங்களாம்பாளையம் பிரிவில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும், தனியார் பேருந்துகள் நிற்காமல் செல் கிறது. இதுகுறித்து கேள்வி கேட்கும் பள்ளி  குழந்தைகள், பொதுமக்களை தகராறு செய்து வருகின்றனர். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 25.10.2005 அன்று வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தாராபுரம்- பழனி சாலையில் உள்ள மங்களாம்பாளையம் பிரிவில் அனைத்து புறநகர் பேருந்துகளும் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்ற செயல்முறை ஆணை உள்ளது. ஆனால் இக்கிராமத்தை சேர்ந்த பயணிகளை இறக்கி விடாமல் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொல்ல பட்டி பிரிவு மற்றும் மணக்கடவில் இறக்கி விடப்படுகிறார்கள்.  இந்நிலையில் திங்களன்று பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியை பேருந்து நிறுத்ததில் இறக்கி விடாமல் பழனி பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டனர். பின்னர் கிராம மக்கள் மறியல் போராட்டத்தால் அதே பேருந்தில் மாணவிகள் திரும்பிய  நிலை ஏற்பட்டது. எனவே, மங்களாம் பாளையத்தில் ஒரு வேகத்தடை அமைப் பதுடன் அனைத்து பேருந்துகளும் நின்று  செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.  மேலும் பேருந்து  அட்டை  வைத்துள்ள  மாணவ, மாணவிகளை அனைத்து  வகை பேருந்துகளும் பயணிக்க உத்தர விட வேண்டும்.  இதுகுறித்து போக்கு வரத்து அதிகாரிகள் விசாரணை செய்து  தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.  மனுவை பெற்றுக்கொண்ட சார்  ஆட்சியர்  நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்துள்ளார். இதன்பின் பொதுமக்கள்  கலைந்து சென்றனர்.