tamilnadu

img

விளை நிலத்தில் சாயக் கழிவுகளைக் கொட்டிய வாகனங்கள் பறிமுதல்

அவிநாசி, பிப். 28- அவிநாசி அருகே சாயக்கழிவு களை கொட்டிய வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து போலீ சாரிடம் ஒப்படைத்தனர். அவிநாசி அருகே மங்கரசு வலையபாளையம், பாப்பாங்குளம், போத்தம்பாளையம், தத்தனூர், குட்டகம், தண்டுக்காரன்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இரவு நேரங்களில் மர்ம நபர்களால் டிப் பர் லாரிகள் மூலமாக தொழிற் சாலை சாயக் கழிவுகளை விவ சாய நிலத்தில் கொட்டி செல்கின் றனர். பல வருடங்களாக இது தொடர்வதால் விவசாய பூமிகள் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடு கிறது. எனவே கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் நிலை யத்திலும் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்திருந்தனர்.  இந்நிலையில் மங்கரசு வலைய பாளையம் ஊராட்சியில் தண்ணீர் பந்தல் பகுதியில் விவசாய தோட் டத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில்  டிப்பர் லாரிகளில் கொண்டுவரப்பட்ட ரசாயனக் கழிவுகளை கொட்டினர். இதுகுறித்த தகவலறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று டிப்பர் லாரியினை  சிறை பிடித்தனர். இதைத்தொடர்ந்து வருவாய் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற சேவூர் போலீ சார் லாரியைப் பறிமுதல் செய்த னர்.  இதுகுறித்து விசாரணையில்  லாரி ஓட்டுநர் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் பால்ராஜ் என்பதும், திருப்பூ ரிலிருந்து சாயக்கழிவுகளை ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதனை யடுத்து  அப்பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம நிர்வாக அலுலர்கள், சேவூர் நில வருவாய் ஆய்வாளர் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் சேவூர் காவல் நிலை யத்தில் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். பேச்சுவார்த்தையில் சேவூர் சுற்றுவட்டார பகுதியில் கொட்டப்பட்ட சாயக்கழிவுகளை எடுத்துவந்த இடத்திற்கே திரும் பக்கொண்டு செல்ல வேண்டும் எனக்கூறப்பட்டது. லாரி ஓட்டுநர் கள் சாய கழிவுகளை எடுத்து செல்வ தாக உறுதியளித்ததால் விடுவிக்கப் பட்டனர்.